Skip to main content

மீனவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
nagai strike


 

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை  மற்றும்  காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த பத்து நாட்களாக  காலவரையற்ற  வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்திவருகின்றனர்,  போராட்டத்தை தொடர்ந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது.  


டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்றாம் தேதி முதல்  காலவரையற்ற  வேலைநிறுத்தப்  போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்.  இன்று பத்தாவது நாளை எட்டியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரு  லட்சத்திற்கும்  மேற்பட்ட  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லாமல்  போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால்  நாகை  மற்றும்  காரைக்கால்  துறைமுகங்களில்  2000 விசைப்படகுகள்  ஐந்தாயிரம்  நாட்டுப்படகுகள்  கரைகளில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கானவரியையும் 
முற்றிலும் நீக்க வேண்டும்  விசைப்படகுகளுக்கு  வழங்கப்படும்  1800 லிட்டர் மானியடீசலை  4 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.  
 

இலங்கையில்  உள்ள  தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர வேண்டும்  என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.  10 நாட்கள் சென்ற நிலையில் இதுவரை அரசு சார்பாக எவ்விதமான பேச்சிவார்த்தைகளும் நடைபெறாத சூழலில் இதனை அடுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நாகை புத்துார் ரவுண்டானா மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட இரு வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 

இதனை தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுப்பட்டவர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர் நாகை மற்றும் நாகை வேளாங்கண்ணி சாலைகளில்  ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.