Skip to main content

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்து தலைமறைவான கூட்டுறவு செயலாளர் கைது

Published on 14/10/2019 | Edited on 18/10/2019

கள்ளக்காதலியின் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கூட்டுறவு வங்கியின் செயலாளர் நான்கு மாதங்களுக்குப் பிறகு கைதாகியிருக்கிறார்.

 

nagapattinam affair case guilt arrested

 

 

நாகை மாவட்டம் தலைஞாயிறு சர்க்கரை ஆலை அருகே உள்ள இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி டூவீலரில் நாராயணமங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் காரால் இடித்தும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியபடி நின்றது.

மணல்மேடு போலீசார் சாலை விபத்தாக பதிவு செய்து விசாரணையை மாற்றிவிட்டனர். சில நாட்கள் கழித்து ராஜகோபால் விபத்தில் இறந்துவிட்டார் என காவல்துறை தெரிவித்தது. "அவரை கொலை செய்தவர்களை கடவுள் கூட மன்னிக்காது, கொலை செய்தவனுங்க வயலில் ஓடியதை நாங்களெல்லாம் பார்த்தோம்" என அப்பகுதி மக்கள் பேசியது மயிலாடுதுறையில் டிஎஸ்பி வெள்ளத்துறைக்கு எட்டியது. அவர் களத்தில் இறங்கி விசாரணையை மேற்கொண்டார். விசாரணையில் ராஜகோபாலை கொலை செய்துவிட்டு விபத்து போன்று நாடகமாடியது தெரியவந்தது. பிறகு கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை தொடர்பாக மணல்மேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ், சிவசிதம்பரம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் இருவரை கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரித்ததில் " ராஜகோபால் மனைவி ஷீலாதேவிக்கும் இளந்தோப்பு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்த அமீர்கான் என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது. இதையறிந்த ராஜகோபால் தொடர்ந்து கண்டித்திருக்கிறார். சொத்துக்காக ஷீலாதேவி கள்ளக்காதலை விட தயாராக இல்லை. வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் நலன் கருதி மனைவியின் போக்கிலேயே ராஜகோபாலும் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அமீர்கானின் சொத்துக்களை ராஜகோபால் அபகரிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக கர்ணன், சத்யராஜ் உள்ளிட்ட 5 பேரை அமீர்கான் பணம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்த அமீர்கான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.