Skip to main content

என்.ஐ.ஏ வை தொடர்ந்து அதிவிரைவு படை பதட்டத்தில் நாகை

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

தேசிய புலனாய்வு மையத்தின் (என்,ஐ,ஏ)அதிரடி சோதனைக்கு இடையில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வை தொடங்கியிருப்பது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 கடந்த சில வாரங்களாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் என்,ஐ,ஏ குழுவினர் சோதனை நடத்தியும் பலரை கைது செய்தும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்திற்கு அதிவிரைவு படையினரின் குழுவினரின் வருகை பொதுமக்களை முனுமுனுக்கவைத்துள்ளது.

 

r

 

மத்திய அதிவிரைவு படையின் துணை கமாண்டோ சிங்காரவேல் தலைமையிலான 46 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகை வந்தனர். அந்த குழு நாகை எஸ்,பி ராஜசேகரனை சந்தித்து, அப்போது நாகை மாவட்டத்தில் மதக்கலவரம், சாதி மோதல்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்படும் இடங்கள், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத்தலங்கள், மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகள், அதனை உள்ளடக்கிய காவல் நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தனர்.

 

பின்னர் நாகை நகர போலீஸ் ஸ்டேஷன், நாகூர் போலீஸ் ஸ்டேஷன், ஆகியவற்றிற்கு சென்று அதிரடி காட்டியதோடு அங்குள்ள குற்றதகவல்கள், மத, சாதிய ரீதியான அசம்பாவித சம்பவங்கள், மிகப்பெரிய அளவிலான கலவரங்களின் தகவல்கள், காவல் நிலைய எல்லையில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள், அன்றைய தினம் பொதுமக்கள் வருகைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும்  கேட்டுக்கொண்டனர்.

 இதுகுறித்து அதிவிரைவு படை அதிகாரிகள் கூறுகையில்," தமிழகத்தில் பதட்டமான பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பதற்றமான சூழலுக்கு என்ன காரணம், யார் அதற்குப் பொறுப்பு என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அவ்வாறு ஆய்வின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை எப்படி தடுப்பது, அசம்பாவிதம் நடைபெறும் இடத்திற்கு அதிவிரைவுப்படை இருக்கும் இடத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளது, எவ்வளவு மணி நேரத்தில் அல்லது எத்தனை நாட்களில் வந்து சேர முடியும், என்பது குறித்தான அனைத்து தகவல்களையும் சேகரித்து பதிவு செய்து கொள்ளப்படும். கலவரம் நடந்தால் அதை அடக்க எந்த உத்தியை பயன்படுத்தலாம், என்பது குறித்தும் பதிவு செய்யப்படும், இதன்படி நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று ஒரு சில போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆய்வு நடத்தி உள்ளோம். தொடர்ந்து இந்த ஆய்வு நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாங்கண்ணி மயிலாடுதுறை வேதாரன்யம் செம்பனார் கோவில்,சீர்காழி உள்ளிட்ட 10 இடங்களுக்குச்சென்று ஆய்வு செய்ய உள்ளோம்," என்றார்.

இது குறித்து காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்," சமீப காலமாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பதட்டமாகவே இருக்கிறது, தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மத பிரச்சனை, தற்போது தீவிரவாத அமைப்போடு தொடர்பில் இருப்பதாக சிலர் கைதாகியிருக்கும் பிரச்சனை, இதையெல்லாம் தாண்டி மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்காக தினசரி ஏதாவது ஒரு இடத்தில் நடக்கும் போராட்டம் என பதட்டத்திலேயே இருக்கிறது, இதனை களைய, போராட்டக்காரர்களை அச்சுறுத்தவும், போராட்டக்காரர்களை பயமுறுத்தவுமே இந்த சோதனை." என்கிறார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.