Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் -வேதாரன்யம் பரபரப்பு

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பொதுமக்களில் ஏழு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடத்துவங்கி உள்ளனர்.

 

h

 

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது. கரியாப்பட்டினம் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திடம் அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வந்தநிலையில், நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு,  கடந்த மூன்றாம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 போராட்டத்தில் கரியாப்பட்டினம், செட்டிபுலம், மருதூர் ,வேதாரன்யம், வாய்மேடு,தாணிக்கோட்டகம்,  குரவப்புலம், தென்னம்புலம், தகட்டூர், கருப்பம்புலம், உள்ளிட்ட கிராமத்துமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

h

 

போராட்டத்திற்கு ஆதரவாக வர்த்தகர்கள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம் டாஸ்மார்க் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. கரியாப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலானஇடங்களில் ஆட்டோக்கள் ஓட்டாமல்,  வர்த்தகர்களோடு ஒன்றுகூடி, ஆட்டோக்களையும் அங்கு நிறுத்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது காவல்துறையினருக்கும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களை காவல்துறை டிஎஸ்பி ஷீகாந்த். கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு மிரட்டவும் செய்தார்,அதில் ஒருவரை, " உன்னோட பொழப்புல மண் அள்ளி போட்டுருவேன், உன்னோட பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடாம,  உனக்கு வாழ்க்கை பிச்சை கொடுத்திருக்கேன்.  உணக்கு தெரியவும் வச்சுருவேன் புரியவும் வச்சிடுவேன். உன்னுடைய யூனிஃபார்ம் எங்கடா, யூனிஃபார்ம் இல்லாமல் எப்படிடா ஆட்டோவ இங்க கொண்டு வந்தீங்க." என எகிற,  ஆட்டோ ஓட்டுனரோ நாங்க இன்னக்கி ஆட்டோ ஓட்டலயா என தயங்கியபடி கூற. இப்ப உண்ண கைதுசெய்வேன் எவன்டா வந்து கேட்பான். என ஒருமையில் பேசி மிரட்டினார். பிறகு ஆட்டோக்களை அப்புறப்படுத்தினர்.

 

போராட்டத்தின் காரணமாக வேதாரண்யம் தாலுகா முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. மேலும் திருக்காரவாசல் முதல் கரியாப்பட்டினம் வரை 144 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். காவிரிபடுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  மத்திய,மாநில அரசுகள் இதை உணர வேண்டும்.  என சுவரொட்டிகள் மூலமும் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.

 

h

 

போராட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எட்டாவது நாள் போராட்டம் தொடர்ந்த போது அங்கு வந்த கரியாப்பட்டினம் போலீசார் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பந்தலை அகற்றினர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஹைட்ரோகார்பன் திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து உள்ளிட்ட 7 பேரையும் அதிரடியாக கைதுசெய்து திருச்சி மத்தியசிறையில் அடைத்துள்ளனர்.

 

 கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பெண்கள் அனைவரும் ஓரணியாகத்திரண்டு கழலியப்ப அய்யனா் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியிருக்கிறது. நாகை மாவட்ட முழுவதிலிருந்தும் காவல்துறையினர் அங்கு வீதிவீதியாக குவிக்கப்பட்டிருக்கின்றன. கரியாப்பட்டினம் முழுவதும் காக்கிகளின் கூடாரம் போல் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.

 

நாடாளுமன்ற தேர்தல் வரும் சமயத்தில் கஜாபுயல் பாதித்த பகுதிகள் போராட்ட களமாக வலுப்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போகுமிடமெல்லாம் ஆளுநருக்கு கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
A black flag for the governor wherever he goes; Police build up

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.