Skip to main content

"அவளை கைவிடமாட்டேன்"... தனது தந்தையால் பாதிக்கப்பட்ட காதலியை ஊரார் முன் கரம்பிடித்த வாலிபர்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

தனது தந்தையே, தனது காதலியை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்திருந்தாலும், அது நாய் கடித்தது போன்ற விபத்து என்று கூறி ஊர்மக்களின் ஆசீர்வாதத்தோடு அந்த பெண்ணை திருமணம் செய்து கரம்பிடித்து உயர்ந்திருக்கிறார் காதலன் ஒருவர். 

 

nagai incident

 



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம். 50 வயதான அவர் அமமுக பிரமுகராகவும், ஜவுளிக்கடை, அடகு கடை, வட்டி என பல தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு கடைக்குவரும் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவரது மகன் முகேஷ்கண்ணன் ஐடிஐ படிக்கும் போது தன்னுடன் படித்த நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறி இருவரும் நீண்ட காலமாக காதலித்துவருகின்றனர். தற்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இருவரும் ஒன்றாகவே வேலையும் பார்த்துவருகின்றனர்.

இந்த நிலையில் இருவரின் காதலையும் தெரிந்துகொண்ட முகேஷின் தந்தை கருப்பு நித்தியானந்தம் மகனின் காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னோட மகனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அதைப்பற்றி உன்னிடம் பேச வேண்டும் உடனே வீட்டுக்கு நீ மட்டும் தனியா புறப்பட்டுவா," என்று அழைத்திருக்கிறார். இதை நம்பிய அந்த இளம்பெண் 19 ம் தேதி சென்னையிலிருந்து பேருந்தில் கிளம்பியவர் 20 ம் தேதி சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். வருங்கால மாமனார் தன்னை எப்பொழுது வந்து அழைத்துச் செல்வார் என்று காத்திருந்த நிலையில்  27 ம் தேதி காரில் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்ற நித்தியானந்தம் அந்தப் பெண்ணை நைசாக பேசி காரில் அழைத்துக்கொண்டு போகிற வழியில் தனக்கு சொந்தமான வீட்டில் அடைத்து அங்கு வைத்திருந்த தாலியை அந்த பெண்ணின் கழுத்தில் கட்டியதோடு இரண்டு நாட்கள் பாலியல் ரீதியாக பல கொடுமைகளை சேர்ந்திருக்கிறார்.

 



அதோடு அவரிக்காட்டில் உள்ள தனது நண்பன் சக்திவேல், பவுன்ராஜவள்ளி தம்பதியினரின் வீட்டிற்கு தூக்கிச்சென்று அங்குஅடைத்துவைத்து. அந்த பெண்தை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இந்த செய்தி அங்கிருந்த நித்தியானந்தத்தின் கார் டிரைவர் மூலம் காவல்துறைக்கு தெரிந்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் கொடுத்தனர்.இதற்கிடையில் கருப்பு முருகானந்தத்தையும் தெரியும் சக்திவேல், பவுன்ராஜவள்ளி தம்பதியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த தகவல் முகேஷ் கண்ணனுக்கு காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டு முகேஷ் கண்ணன் வந்ததும் நடந்ததை எடுத்துக்கூறினார்கள். அவரோ" இது ஒருவிபத்து. அவர என்னோட அப்பன்னு சொல்லவே  கூச்சமா இருக்கு. வழியில் போகும் போது ஒரு நாய் கடித்ததாக நினைத்து இதை நான் மறந்துவிடுகிறேன். நீண்ட நாட்களாக நாங்கள் காதலித்தி வருக்கிறோம், அவளை பற்றி எனக்கு தெரியும், அவளை கைவிடமாட்டேன் என கூறி ஊரார் முன்னிலையில் இரவு அங்குள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.