Advertisment

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைபோல் இளம்பெண்களை படமெடுத்து மிரட்டிய நாகை இளைஞர்!

தமிழகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் அடங்குவதற்குள், நாகை இளைஞர் ஒருவர் இளம் பெண்களை புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நாகை வெளிப் பாளையத்தை அடுத்துள்ள பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் 23 வயதேயான சுந்தர் சென்னையில் கார் டிரைவராக இருந்துகொண்டு பல பெண்களோடு நெருக்கமாக பழகி,நெருக்கமாகபுகைப்படங்களை எடுத்து, தனது ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததன் பெயரில் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறான்.

இது குறித்து விசாரித்தோம், " நாகப்பட்டினம் அருகே உள்ள ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சுந்தர் அந்தக் கடைக்கு அடிக்கடி ரீச்சார்ஜ் செய்வதுபோல் வந்துசென்றிருக்கிறான். அந்த வருகை சுந்தருக்கும், இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அந்த பழக்கம் வாலிபக்கோலாறால் இவரும் காதலர்களாக மாறி உல்லாசமாக திரியவும் வைத்திருக்கிறது.

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஒரு வருடமாக நீடித்த உல்லாச காதல், திடீரென்று விரிசல் ஏற்பட்டது. சுந்தரின் நடவடிக்கையில் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுந்தர் பல பெண்களோடு பழக்கம் வைத்திருப்பதை தெரிந்துகொண்டு விலகியிருக்கிறார் அந்த இளம்பெண். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் அந்த இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் தன்னுடன் பழகவும், இச்சைக்கு இணங்கவும் வற்புறுத்தியிருக்கிறான். ஆனால் அந்த இளம்பெண் தொடரந்து மறுத்திருக்கிறார். கோபமான சுந்தர் ஒரு திட்டம் தீட்டுகிறான், மீண்டும் உண்மையான காதலனைப்போல நடிக்கிறான். காதலியான அந்த இளம் பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக பேசி தனது போலியான காதலை மீண்டும் நீடிக்க செய்கிறான். நாளடைவில் அந்த இளம்பெண்ணின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுவதுபோல் நடித்துள்ளான்.

 Nagai district youth who sexual abuse young girl like Pollachi's sex case

இந்த நிலையில் காதலியிடம் தனக்கு நேரம் காலம் சரியில்லை நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம், அமைதிக்கிடைக்கும் என்று கூறி அழைத்துள்ளான். அந்த இளம்பெண்ணுக்கு காதல் கண்ணை மறைத்தது, அவன் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்து சுந்தரோடு காரைக்கால் செல்கிறார். காரைக்கால் பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்ற சுந்தர் அங்கு ஒரு கடையில் குளிர்பானம் வாங்கி மயக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளான். இதையடுத்து மயக்க நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை ஒரு மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று ஆடைகளை கலைத்து, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்திருக்கிறான். மயக்கம் தெளிந்ததும் இருவரும் ஊர் திரும்பி விட்டனர். இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

அதன் பிறகே விவகாரம் பூதாகரம் ஆகிறது. செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை காட்டி நீ நான் கூப்பிடும் போதுவரவில்லை எனில் படம் யூடிப், முகநூலில் பரவிடும் என மிறட்டியிருக்கிறான். இதையறிந்து அவமானம் அடைந்த இளம் பெண் உடனடியாக கீழ்வேளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி வண்கொடுமை விவகாரம் அடங்குவதற்குள், நாகப்பட்டினத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

nagai police pollachi sexual abuse Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe