Skip to main content

எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேர் கைது!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி அவர் நலத்திட்டமாக 31 பேருக்கு ஸ்கூட்டி வழங்க உள்ளதாக அட்டை அச்சடித்து கிராமங்களில் கொடுத்து ரூபாய் 5 ஆயிரம் வரை வசூலில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் ஆவணம் கனி உள்பட இருவரை பொதுமக்களே பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவன் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஹீரோ ஷோரூமுக்கு பேராவூரணி வட்டம் ஆவணம் கிராமத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர் மார்ச் 5- ஆம் தேதி நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி இலவசமாக ஸ்கூட்டி வழங்குகிறாரா? அந்த வண்டிகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படுகிறதா? என்று கேட்டுள்ளார். ஷோரூமில் இருந்து பேசியவர்கள் அப்படி ஏதும் இல்லை என்று சொன்னதுடன் கூடுதல் விளக்கம் கேட்க இருவர் டோக்கன் கொடுத்து பணம் வசூல் செய்கிறார்கள் என்று போனில் தொடர்பு கொண்ட நபர் கூறியுள்ளார்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

அதன் பிறகு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை ஷோரூமில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்க ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். பணத்துடன் இருப்பதாகக் கூறி அவர்களை கீரமங்கலம் வரவைத்து பிடித்து கீரமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

NAGAI DISTRICT TAMIMUN ANSARI MLA NAME MISS USED POLICE ARRESTED

இது குறித்து ஷோரூம் நிர்வாகிகள் கூறும் போது, "ஆவணத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டதும் மோசடி நடப்பதை அறிந்து சம்மந்தப்பட்டவர்களை பின் தொடர்ந்தோம். எங்களுக்கு வண்டி வேண்டும் என்று பொறி வைத்து பிடித்தோம். அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கனியின் பைக்கில் இருந்த பையில் 50- க்கும் மேற்பட்ட டோக்கன்கள், ஒரு நோட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ஆதார் நகல் வாங்கி வைத்திருந்தனர். விசாரித்த போது விடுதி சந்திரன் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.