Skip to main content

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 'பெட்ரோல் பங்க்' ஊழியர்கள்!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020




 

nagai district petrol punk labours incident police investigation


நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கத்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து விசாரித்தோம், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் நண்பர் முருகேசன் ஆகிய இரண்டு பேரும் நாகை அருகே உள்ள திருமருகல் ஜெயசந்திரா ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தனர். அந்த பங்க் கச்சனம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமானது. 

அந்த பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முருகேசன் தற்கொலை செய்துகொள்ளும் வரை விசுவாசமான வேலைக்காரராகவே இருந்து வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் நண்பன் ஆனந்தனை அழைத்துவந்து வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்துள்ளார்.

 

nagai district petrol punk labours incident police investigation

இந்நிலையில் வரவு செலவு கணக்கு பார்த்ததில் சுமார் 8 லட்சம் ரூபாய் கணக்கு வராததால் திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து அந்த பணம் கணக்கிற்கு வராததால் தொகையை இருவருமே ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் எழுதி கொடுத்துவிட்டு அங்கேயே வேலைப் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2 ம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தனின் இறப்புக் குறித்தான தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்திற்கு நேற்று (06/06/2020) இரவு முருகேசனை அழைத்து சென்று முருகேசன் மீதே புகார் அளித்திருக்கிறார், அங்கு முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி போலீசாரை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் மொத்த தொகையும் தன்னால் இனி கொடுக்க முடியுமா? என்கிற அச்சத்திலும், தனது நண்பன் ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

nagai district petrol punk labours incident police investigation

இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இரண்டு பேரின் உறவினர்களும் நாகைக்கு வந்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர் திட்டச்சேரி போலீசார்.

ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரின் உயிரிழப்பு உரிமையாளரால் நடந்ததா? அல்லது கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கியதால் அவர்கள் மிரட்டி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.