Skip to main content

இலவசமாக வருடத்திற்கு ஐம்பதாயிரம் லிட்டர் நிலவேம்பு கசாயம் வழங்கும் வைத்தியர்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

எந்த நோய் யாரை எப்போது தாக்குகிறது என்பது மருத்துவர்களுக்கே புரியவில்லை. தற்போது பொதுமக்களை ஆட்டுவிக்கும் டெங்கு, மலேரியா போன்ற மர்ம காய்ச்சலுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிலவேம்பு கசாய குடிநீரும் சிகிச்சையும் இலவசமாக கொடுத்து வருகிறார் சித்த வைத்தியரான அஜ்மல்கான்.
 

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திட்டச்சேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அஜ்மல்கான், குடும்பத்தின் வறுமையைத் தாண்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையே மனப்பூர்வமாக ஒவ்வொரு நாளும் மருத்துவ சேவையை செய்து வருகிறார். திருமருகல் நாகூர் நாகை உள்ளிட்ட பகுதிகளில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவரது தந்தையும், தாத்தாவும் செய்துவிட்டு போன சேவையை மறக்காமல் இவரும் செய்து வருகிறார் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
 

nagai district peoples  free service siddha doctor


தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வேளையும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஜமாத், என அனைத்து இடங்களிலும், பொதுமக்கள் குடியிருப்பு வீடுகள் என வீடுவீடாக சென்று நிலவேம்பு கசாயத்தை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
 

இது குறித்து அவரிடம் விசாரித்தோம், 20 வருட காலமாக இந்த பணியை செய்து வருகிறேன். வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு மையத்தையும் நடத்தி வருகிறேன். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நோய் வரும் தற்போது டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 50,000 லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் தயார் செய்து எல்லா தரப்பு மக்களுக்கும் இலவசமாக வீடு தேடி சென்று கொடுக்கிறேன். ஆண்டுதோறும் 100- க்கும் மேற்பட்ட இடங்களுக்கு நானே சென்று இந்த சேவையை எந்தவித எதிர்பார்ப்பின்றி செய்து வருகிறேன். அதை தொடர்ந்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், பேருந்து நிலையம், பள்ளி வாசல்கள், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும்  ஸ்டால் அமைத்து நிலவேம்பு கசாயத்தை இலவசமாகக் கொடுத்து வருகிறேன். 

nagai district peoples  free service siddha doctor


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி அருந்தும் வகையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு கலந்து நிலவேம்பு கசாயத்தை உருவாகி கொடுக்கிறேன். மாநில அரசாங்கம் ஒரு பக்கம் டெங்குவை ஒழிக்க முயற்சித்து வந்தாலும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் மூலிகையை கொண்டு டாக்டராக இருந்து செயல்பட வேண்டும்." என்கிறார் அவர். பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பு மக்களிடமும் தற்போது பாராட்டைப் பெற்று வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.