Skip to main content

நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம்!- சந்தனக் கூடு திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்த அறிவுறுத்தல்!

Published on 15/12/2019 | Edited on 15/12/2019

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நாகூர் தர்கா அறங்காவலர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. இதற்குப் பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
 

நீதிபதிகள் சமரச குழு 'நாகை மாவட்ட நாகூர் தர்கா 180 ஆண்டுகள் பழமையானது. அனைத்து மதத்தினரும் இங்கு வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். இந்த தர்காவில் 8 பேர் அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வருகின்றனர். இவர்களது நியமனம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும். இந்த நிலையில் 8- வது அறங்காவலராக இருந்த வாஞ்சூர் பக்கிர் இறந்துவிட்ட காரணத்தினால், அவருக்குப் பதிலாக கமீல் சாஹிப் என்பவர், தன்னை அறங்காவலராக நியமிக்க உரிமை கோரினார்.

nagai district nagore dargah santhanakoodu festival


இந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, அக்பர் அலி ஆகியோர் அடங்கிய சமரச குழுவை அமைத்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சமரசம் செய்ய உத்தரவிட்டார்.

 

இதையடுத்து இந்த நீதிபதிகள் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 8- வது அறங்காவலராக செய்யது கமீல் சாஹிப்பை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சமரச குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதரப்புகளுக்கு ஆஜரான வக்கீல்கள் காஜா மொய்தீன் ஹிஸ்தி, ஸ்ரீநாத், ஸ்ரீதேவன் ஆகியோர், தங்கள் கட்சிக்காரர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு விட்டதாகக் கூறினர். அதைத் தொடர்ந்து  நீதிபதி, சமரசம் செய்த நீதிபதிகள் குழுவுக்கும், இரு தரப்பு வக்கீல்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.


பின்னர்,‘நாகூர் தர்கா தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்ததால், அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த நீதிபதி, தற்போது சமரசம் ஏற்பட்டு விட்டதால், இதுவரை தர்கா நிர்வாகப் பொறுப்பை கவனித்துவரும் குழு, அனைத்து பொறுப்புகளையும் இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 


மேலும்,‘சமசரம் செய்த 3 நீதிபதிகளின் அறிவுரைகளை, தர்கா அறங்காவலர்கள் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றி, இந்த பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற சந்தனக்கூடு திருவிழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர்கள் வழக்கு தொடர்வார்கள். தற்போது அறங்காவலர்களுக்கு இடையே ஒற்றுமையும், சமரசமும் ஏற்பட்டு விட்டதால், வருகிற ஜனவரி மாதம் 26- ம் தேதி நடைபெற உள்ள ‘சந்தனக்கூடு’திருவிழாவை அனைவரும் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன், அவரவர் பங்களிப்புடன் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’என்றும் நீதிபதி கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.