நாடோடிகள் 2 திரைப்படத்துக்கு தடை நீங்கியது! 

நடோடிகள்- 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சசிகுமார், நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் -2 திரைப்படத்தை தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

nadodigal 2 movie release permission chennai high court order

இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி எப்.எம்.பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாடோடிகள் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், படத்தயாரிப்பு செலவுகளுக்காகத் தன்னை அணுகியபோது, படத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமையை அளிப்பதாக, ரூ.5 கோடியே 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. பல தவணைகளாக ரூ.3 கோடியே 50 லட்சம் தயாரிப்பாளருக்கு வழங்கிய நிலையில், வேறு நிறுவனம் மூலமாக படத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியிட தயாரிப்பாளர் நடவடிக்கைகள் எடுத்து வருவதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டது. படத்தின் உரிமை தனக்கே சொந்தமானது என அறிவிக்க வேண்டும், அதுவரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

nadodigal 2 movie release permission chennai high court order

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, திரையரங்குகளில் படத்தை நேற்று (30/01/2020) வெளியிடுவதற்காக "கீ டெலிவரி மெசேஜ்" தர கியூப் நிறுவனத்திக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தயாரிப்பாளர் நந்தகோபால் சார்பில் இன்று (31/01/2020) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. அப்போது தயாரிப்பாளர் சார்பில் கொடுக்க வேண்டிய தொகையில் பாதி தொகையை அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.

chennai high court nadodigal2 samuthirakani Sasikumar
இதையும் படியுங்கள்
Subscribe