Skip to main content

கண்ணைத் தோண்டி மர்ம உறுப்பை நசுக்கி சமூகசேவகர் கொலை..? பின்னணியில் மணல் திருடர்களா.!?

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

காலையில் ஆடுமேய்க்க சென்ற சமூக சேவகர் இரவு வேளையில், கண்ணைத் தோண்டி, மர்ம உறுப்பை நசுக்கிய நிலையில் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

 mystery incident to the the social worker ..? Sand thieves in the background.!?

 

சிவகங்கை மாவட்டம் கல்லல் தமிழர் தெருவினை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவியின் பெயர் வசந்தா. தமிழ்நாடு அரசுப் பேருந்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இரு தரப்பிற்குமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்திருக்கின்றது. இதே வேளையில், சமூக அவலங்களுக்கு எதிராக, மக்களுக்கு நீதி கிடைக்க அரசு மற்றும் சமூகவிரோதிகளுக்கு எதிராகவும் போராடியும் வந்திருக்கின்றார். பணிக்கான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தினசரி அருகிலுள்ள மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆடுமேய்ப்பது வழக்கமான பணிகளில் ஒன்று. இந்நிலையில், திங்களன்று மாலை வேளையில் மணிமுத்தாறு ஆற்றுப்படுகையில் பிணமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.விசாரணையை முடிக்கிவிட்ட நிலையில், " திருநாவுக்கரசின் சாவில் மர்மம் இருக்கின்றது. வீடியோ கேமிராவில் பிரேதப் பரிசோதனையை பதிவு செய்தல் வேண்டும். அதுபோல் இது கொலை என வழக்குப்பதிவு செய்யவேண்டுமென," கோரிக்கை வைத்து சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் அவரது உறவினர்கள்.

 

incident

 

"சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக அப்பா போராடி வருபவர். 2018ம் ஆண்டு கல்லல் காவல் நிலையத்திலிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மீது இவர் கொடுத்த புகார் தற்பொழுது விசாரணைக்கு வந்திருக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை அதற்காக போலீசார் வந்து விசாரித்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். இவரை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி மிரட்டியும் இருக்கின்றனர் இவர் போகவில்லை. இந்த நிலையில் கண்கள் தோண்டப்பட்டு, அவரது மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கின்றார். இது கொலையே.!!!" என்கிறார் அவரது மகளான வழக்கறிஞர் அறிவுசெல்வி.

இதே வேளையில், ஆடு ஒன்றும் அங்கு வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவர அதனையும் மீட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட எல்கைக்குட்பட்ட காவல்துறையினர். இது இப்படியிருக்க, இவர் கொலையுண்ட பகுதியில் சமீபகாலமாக மணல் திருட்டும் பெருமளவில் நடந்துள்ளது. இதில் கொரண்டி, தேவப்பட்டு மற்றும் கல்லல் பகுதியினை சேர்ந்தவர்களே சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அவர்களே இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்புண்டும் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.