Advertisment

வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள்? - அதிமுக, பாஜக சாலை மறியல்

k;l

தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று 5 வார்டுகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டது. இதற்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியில் இருந்து நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

elections police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe