Skip to main content

வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள்? - அதிமுக, பாஜக சாலை மறியல்

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

k;l

 

 

தமிழகத்தில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது.  இந்த தேர்தலின்போது சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த புகார்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று 5 வார்டுகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டது. இதற்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியில் இருந்து நடைபெற்றது. 

 

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்