Skip to main content

நடிகை சித்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறிய வேண்டும்.. ஹேமந்தின் தந்தை காவல் ஆணையரிடம் மனு..! 

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

The mystery behind the death of actress Chitra should be discovered .. Hemant's father petitions the Commissioner of Police ..!

 


சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஹேமந்தின் தந்தை சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.

 

அந்த மனுவில், என் மருமகள் தற்கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை. அதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்த புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு பின் பதிவு திருமணமும் செய்யப்பட்டது.

 

அவரது மரணத்திற்கு முன்தினம்தான், அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மண்டபம் சென்று பார்த்துவந்தோம். அதனால், இந்த மரணத்தின் பின் இருக்கும் மர்மத்தை விசாரணையை தீவிரப்படுத்தி காவல்துறை கண்டறிய வேண்டும். என குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

actress chithra case update

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை, குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். 

 

ஹேம்நாத், அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 


 

Next Story

நடிகை சித்ரா வழக்கில் தந்தை எடுத்த திடீர் முடிவு 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

 A sudden decision taken by actress Chitra's father

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.