Mysterious person who theft the Chief Constable's bike

Advertisment

திருச்சி கண்டோன்மென்ட் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் கோவிந்தராஜ், கடந்த 21ஆம் தேதி வழக்கமாக தன்னுடைய புல்லட்டில் பைக்கில் பணிக்கு வந்துள்ளார். தன்னுடைய இருசக்கர வாகனத்தைக் காவல் நிலையத்தின் உள்ளே நிறுத்தி வைத்திருந்த நிலையில், காவல் நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் புல்லட்டைத் திருடிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு சென்றுள்ளார்.

காவல் நிலையத்திற்குள் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா அப்பொழுது பழுதடைந்திருந்ததால் உள்ளே வந்துசென்ற நபர் யார் என்பது தெரியவில்லை. புல்லட்டைத் தள்ளிக்கொண்டே சென்ற அந்த மர்ம நபரின் காட்சிகள் காவல் நிலையத்திலிருந்து சற்றுத்தள்ளி 500 மீட்டர் தூரத்தில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அந்த நபர் யார் என்பதை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்குள்ளே திருடப்பட்டதால் இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாமல் அந்த மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.