Skip to main content

வீடு வரை பின் தொடர்ந்து நகையை பறித்த மர்ம நபர்கள்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Mysterious people who robbed the necklace following up to the house

 

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் துணிச்சலாகக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள். ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 44 வயது உமாமகேஸ்வரி. இவர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 28ந் தேதி மாலை அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

 

வீடு வந்ததும் வீட்டுக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து உமா மகேஸ்வரி  மீது வண்டியை வைத்து இடித்துள்ளனர். இதில் உமா மகேஸ்வரி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் கீழே விழுந்த உமா மகேஸ்வரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையைக் கழுத்திலிருந்து பறித்துக் கொள்ளையடித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் வேகமாகச் சென்று விட்டனர்.

 

ஓரிரு நிமிடத்திலேயே குடியிருப்பு பகுதி கொண்ட அவரது வீட்டுக்கு முன்பே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அவர் ஈரோடு தாலுகா காவல்துறை நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா  காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெண்களை அச்சமடையச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.