Skip to main content

தேசிய நெடுஞ்சாலை அருகே இளைஞர் மர்ம மரணம்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Mysterious passed away of youth near National Highway

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் செல்லத்துரை(23) அப்பகுதியில் நெல் அறுவடை இயந்திர டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை நண்பர்களை பார்த்து விட்டு வருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அன்று இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் செல்லத்துரையை தேடியும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

 

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை அரசூர் அருகே சாலை ஓரம் உள்ள யோக ஆஞ்சநேயர் பெரிய சாமி சிலை பின்புறம் ரத்தக் காயங்களுடன் செல்லத்துரை பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்த தகவல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, சமபவ இடத்திற்குச் சென்றுள்ளனர். செல்லத்துரை உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் பிணமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுத அவரது உறவினர்கள் செல்லத்துரையை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர் என்றும் அவர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லத்துரையின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும், பிரேதப் பரிசோதனையில் அவர் இறப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் இது கொலையா? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விபரம் தெரியும். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். கொலையாக இருந்தால் அதற்கு யார் காரணம் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலை அருகே இளைஞர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.