Skip to main content

இரவு நேரத்தில் வியாபாரிகளிடம் கைவரிசை காட்டும் மர்மநபர்கள்; கும்பகோணம் பரபரப்பு

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

கோயில் நகரமான கும்பகோணத்தில் மர்மநபர்கள் வழிப்போக்கர்களிடமும், வியாபாரிகளிடமும் கைவரிசைகாட்டி வழிபறி செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியை சேர்ந்தவர் சங்கர். மீன்வியாபாரியான அவர் இன்று அதிகாலை மீன் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் மீன் மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். அவரை கொட்டையூர் அருகே இருட்டான பகுதியில் முகத்தை மூடிக்கொண்டு நின்ற 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து நிறுத்தினர். அவர்கள் முகத்தை முழுவதுமாக சங்கரால் அடையாளம் கண்டிடமுடியவில்லை.

 

Mysterious men who hand out merchants at night at Kumbakonam sensation

 

மூன்று மர்மநபர்களும் கத்தியை காட்டி உன்னிடம் உள்ள பணத்தை கொடு இல்லையென்றால் உன் உயிரைக் கொடு என்று மிரட்டியிருக்கின்றன. சங்கர் பணத்தைக்கொடுக்க மறுத்ததால் வைத்திருந்த கத்தியால் சங்கரின் தலை மற்றும் உடலில் குத்திவிட்டு காயமடைந்த சங்கர் தரையில் மயங்கி விழுந்ததும், அவர் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

அதேபோல சாமிமலையை சேர்ந்த முஹம்மது சலீம் என்பவர் காய்கறி கொள்முதல் செய்வதற்காக கும்பகோணம் தாராசுரம் காய்கனி மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். வளையப்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரை முதல் நிகழ்வு போலவே மூன்று பேர்கொண்ட கும்பல் முகமூடியை அணிந்துகொண்டு வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக குத்தியும் கட்டையால் தாக்கிவிட்டும் அவரிடமிருந்த 4 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த சலீமை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .

இப்படி தொடர்ந்து நடக்கும் சம்பவத்தினால் வியாபாரிகளும், பொதுமக்களும் கும்பகோணம் பகுதியில் நடமாடுவதற்கே அச்சம் கொள்கின்றனர். வியாபாரிகளை குறிவைத்து நடந்ததா இந்த சம்பவம் பல நாட்கள் நோட்டமிட்டு நடந்ததா அல்லது புதிய கொள்ளையர்கள் உருவாகியிருக்கிறார்களா, பழைய திருடர்களின் கைவரிசையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.