Skip to main content

கடலில் மிதந்துவந்த மர்ம திரவ பாட்டில்... குடித்த மீனவர் உயிரிழப்பு!

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

Mysterious liquid bottle floating in the sea

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த மீனவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாம்பன் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரையில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 3 லிட்டர் மர்ம திரவம் கொண்ட பாட்டில் ஒன்று மீனவர்கள் வீசிய வலையில் சிக்கியுள்ளது. அந்த பாட்டிலில் இருந்த திரவத்தை அங்கிருந்த மீனவர்களில் அந்தோணி, போஸ்,  வினோத் ஆகிய மூன்று மீனவர்கள் மட்டும் குடித்துள்ளனர்.

 

அந்த மர்ம திரவத்தை குடித்த சிலநொடிகளிலேயே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி சம்பவ இடமான படகிலேயே உயிரிழந்தார். போஸ், வினோத் ஆகிய மற்ற இருவரும் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொளத்தூரில் மர்ம பொருள் வெடிப்பு; போலீசார் விசாரணை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Mysterious substance explosion in Kolathur

கொளத்தூரில் வீடு ஒன்றில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு ஆதித்ய பிரணவ் என்ற மகன் உள்ளார். அவர் பிளஸ் டூ படித்து வந்தார்.  அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட  ஆதித்ய பிரணவ் பல்வேறு கெமிக்கல்கள் பயன்படுத்தி கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவன் ஆதித்ய பிரணவ் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பாக வேதிப் பொருட்களை பயன்படுத்திய போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகப்படியான போலீசார் அங்கு குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.