Skip to main content

விதவைகளை குறிவைத்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

வத

 

சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கரோனா இறப்பை பயன்படுத்தி இறந்தவரின் தகவலை வைத்து ஒரு கும்பல் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக விதவைகளை மட்டுமே குறிவைத்து கைவரிசையை காட்டும் இந்த கும்பல் ஒரு வருட காலத்திற்கும் மேலாக போலீசுக்கு சவாலாய் இருந்து வருகின்றது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் சனிக்கிழமையென்று சிதம்பரம் அடுத்த சி.வீரசோழகன் பகுதியை சேர்ந்த சமீபத்தில் கணவரை இழந்தவர் கொளஞ்சி(55) இவரது வீட்டிற்குள் அனுமதி இன்றி புகுந்த இரண்டு முகம் தெரியாத நபர்கள், வீட்டில் தனியாக இருந்த கொளஞ்சியிடம் தாங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாகவும், விதவை உதவித்தொகை வேண்டி நீங்கள் கேட்ட விண்ணப்பம் விசாரணையில் இருக்கிறது. 

 

அதனை சரி செய்தால் இன்று மாலையே உங்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் அது சம்பந்தமாகதான் வந்துள்ளோம். என தெரிவித்து ரூ.4 ஆயிரம் பணத்தை ரொக்கமாக கேட்டுள்ளனர். பணம் தன்னிடம் இல்லை என தெரிவித்த பிறகும் தொடர்ந்து நம்பும்படியாக பேசி அவரிடம் இருந்து 1 சவரன் தங்கநகை, மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை லாவகமாக வாங்கி சென்றுள்ளனர். 

 

அவர்கள் சென்ற பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் ஏமாற்றப்பட்டோம் என தெரிந்து சம்பந்தப்பட்ட பெண் கொளஞ்சி சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல பொங்கல் விழா அன்று சிதம்பரம் அடுத்த அய்யனூர் காளியம்மன் கோவில் தெருவில் இதே கும்பல் சென்று 5 பெண்களிடம் விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி தலா ரூ.1000 வசூல் செய்து சென்ற சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.