Skip to main content

நோய்வாய்ப்பட்டவர்களைக் குறி வைக்கும் மர்ம கும்பல்... தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Mysterious gang to target the sick ... Police in intensive search hunt

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா சத்தியவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரத்குமார்-ஜெயந்தி தம்பதி. இவர்களுக்கு அனுஷ் - தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி சத்தியவாடி கிராமத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள் ஜெயந்தி, சரத்குமார் தம்பதியரின் இரண்டு குழந்தைகளுக்கும் நாட்டு மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் அந்த தம்பதியர் நம்பும் அளவிற்குப் பேசி மடக்கி உள்ளனர். பிறகு மீண்டும் ஒரு நாள் வருவதாகக் கூறி விட்டுச் சென்றவர்கள் கடந்த 4ஆம் தேதி சத்தியவாடி கிராமத்திற்கு மீண்டும் வந்துள்ளனர்.

 

அந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தியிடம் உங்கள் இரண்டு குழந்தைகளையும் குணப்படுத்துவது எங்கள் பொறுப்பு எனவே நாங்கள் சொல்லும் நாளில் திண்டிவனத்திற்கு வந்தால் உங்களிடம் மருந்து வாங்கிக் கொடுக்கின்றோம்; அதைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சில நாட்களில் குழந்தைகளுக்குக் காது கேட்கும் திறனும், வாய் பேசவும் திறனும் வந்துவிடும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை முழுமையாக ஜெயந்தி நம்பியுள்ளார். அதன்படி நேற்று காலை திண்டிவனத்திற்கு ஜெயந்தியை வரும்படி அவர்கள் செல்போன் மூலம் கூறியுள்ளனர். அதோடு மருந்து செலவிற்காக 45,000 ரூபாய் பணம் எடுத்து வருமாறும் கூறியுள்ளனர்.

 

மர்ம மனிதர்களின் பேச்சு உண்மை என நம்பிய ஜெயந்தி அவரது சகோதரர் சத்யராஜ் என்பவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு 45,000 பணத்துடன் திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்ம நபர்களைச் சந்தித்த ஜெயந்தியிடம் அவர்கள் இருவரும் சிலமருந்துக் கடைகளுக்கு அழைத்துச் சென்று ஏதோ ஒரு மருந்தின் பெயரைக் கூறி கேட்டுள்ளனர். அந்த மருந்து தங்களிடம் இல்லை என்று மருந்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர். உடனே அந்த மர்ம நபர்கள் ஜெயந்தியிடம் நாங்கள் ஏற்கனவே ஒருவருக்குப் பேசியபடி மருந்து கொண்டு வந்துள்ளோம் வேண்டுமானால் அந்த மருந்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டு அந்த நபருக்கு வேறு மருந்து தயாரித்துக் கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பிய ஜெயந்தி 45,000 பணத்தைக் கொடுத்து அவர்கள் கொடுத்த ஒரு மருந்து பாட்டிலை வாங்கியுள்ளார்.

 

பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஜெயந்தி அந்த மருந்து பாட்டிலைத் திறந்து முகர்ந்து பார்த்தபோது அதில் வெறும் தண்ணீர் மட்டுமே நிரப்பி இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு மருந்து கொடுப்பது போல் நடித்து நூதன முறையில் 45,000 பறித்துச் சென்ற அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் அருகிலுள்ள பெரிய பாபு சமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஐயனாரப்பன்.

 

இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துள்ளனர். இவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். ஐயனாரப்பன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். அவருக்கு உதவியாக 77 வயதுள்ள அவரது அத்தை சுந்தராம்பாள் உடனிருந்து கவனித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணி அளவில் அவர்களது வீட்டிற்கு 2 மர்ம நபர்கள் பைக்கில் வந்துள்ளனர். தாங்கள் நாட்டுமருந்து கொடுப்பவர்கள் எனவும் எங்கள் மருந்தை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறியுள்ளனர். இதை நம்பிய சுந்தராம்பாள், ஐயனாருக்கு வைத்தியம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் இருவரும் மூலிகை எண்ணை எனக் கூறி ஐயனாரப்பன் கைகளில் ஒரு திரவத்தைத் தடவி உள்ளனர்.

 

பின்னர் சுந்தராம்பாளிடமும் நீங்களும் எண்ணைத் தேய்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உடல் வலி சரியாகும் என்று கூறி உள்ளனர். அப்போது சுந்தராம்பாள் எண்ணெய் தேய்ப்பதற்காகத் தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் பவுன் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த இருவரும் சுந்தராம்பாளின் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். நாட்டு மருத்துவம் பார்ப்பதாகக் கூறி வயதான  தன்னிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பற்றி சுந்தராம்பாள் கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். நாட்டு மருத்துவர்கள் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது போன்று நாட்டு மருத்துவம் செய்வதாகக் கூறி பல கிராமப்புறங்களில் சென்று அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்கள் கவனத்தைத் திசை திருப்பி பணம் நகை பறிக்கும் கும்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. காவல்துறை இந்த மோசடி கும்பலை விரைவில் பிடிக்க வேண்டும் இல்லையேல் இதுபோன்ற மோசடிகள் சாதாரண ஏழை எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களிடம் தொடரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.