Mysterious gang to target the sick ... Police in intensive search hunt

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிதாலுக்காசத்தியவாடிஎன்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரத்குமார்-ஜெயந்தி தம்பதி. இவர்களுக்குஅனுஷ் -தனுஷ் என நான்கு வயதுள்ள இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதிசத்தியவாடிகிராமத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள் ஜெயந்தி, சரத்குமார் தம்பதியரின் இரண்டு குழந்தைகளுக்கும் நாட்டு மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை இன்றிகுணப்படுத்துவதாகக்கூறியுள்ளனர். இதற்காக அவர்கள் அந்த தம்பதியர் நம்பும்அளவிற்குப்பேசி மடக்கி உள்ளனர். பிறகு மீண்டும் ஒரு நாள்வருவதாகக்கூறிவிட்டுச்சென்றவர்கள் கடந்த 4ஆம் தேதிசத்தியவாடிகிராமத்திற்கு மீண்டும் வந்துள்ளனர்.

அந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தியிடம் உங்கள் இரண்டு குழந்தைகளையும் குணப்படுத்துவது எங்கள் பொறுப்பு எனவே நாங்கள் சொல்லும் நாளில் திண்டிவனத்திற்கு வந்தால் உங்களிடம் மருந்து வாங்கிக் கொடுக்கின்றோம்;அதைக்குழந்தைகளுக்குக்கொடுத்தால் சில நாட்களில்குழந்தைகளுக்குக்காது கேட்கும் திறனும், வாய் பேசவும் திறனும் வந்துவிடும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை முழுமையாக ஜெயந்தி நம்பியுள்ளார். அதன்படி நேற்று காலை திண்டிவனத்திற்கு ஜெயந்தியை வரும்படி அவர்கள்செல்போன்மூலம் கூறியுள்ளனர். அதோடு மருந்து செலவிற்காக 45,000 ரூபாய் பணம் எடுத்து வருமாறும் கூறியுள்ளனர்.

மர்ம மனிதர்களின் பேச்சு உண்மை என நம்பிய ஜெயந்தி அவரது சகோதரர் சத்யராஜ்என்பவரைத்துணைக்கு அழைத்துக்கொண்டு 45,000 பணத்துடன் திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அங்கு மர்மநபர்களைச்சந்தித்த ஜெயந்தியிடம் அவர்கள் இருவரும்சிலமருந்துக்கடைகளுக்கு அழைத்துச் சென்று ஏதோ ஒரு மருந்தின்பெயரைக்கூறி கேட்டுள்ளனர். அந்த மருந்து தங்களிடம் இல்லை என்று மருந்து கடைக்காரர்கள் கூறியுள்ளனர். உடனே அந்த மர்ம நபர்கள் ஜெயந்தியிடம் நாங்கள் ஏற்கனவேஒருவருக்குப்பேசியபடி மருந்து கொண்டு வந்துள்ளோம் வேண்டுமானால் அந்த மருந்தைஉங்களுக்குக்கொடுத்துவிட்டு அந்த நபருக்கு வேறு மருந்துதயாரித்துக்கொடுக்கிறோம்எனக்கூறியுள்ளனர். அதனை நம்பிய ஜெயந்தி 45,000பணத்தைக்கொடுத்து அவர்கள் கொடுத்த ஒரு மருந்து பாட்டிலை வாங்கியுள்ளார்.

Advertisment

பணத்தைப்பெற்றுக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஜெயந்தி அந்த மருந்துபாட்டிலைத்திறந்து முகர்ந்து பார்த்தபோது அதில் வெறும் தண்ணீர் மட்டுமே நிரப்பி இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில்போலீசார்வழக்குப்பதிவு செய்து நாட்டு மருந்து கொடுப்பது போல் நடித்து நூதன முறையில் 45,000 பறித்துச் சென்ற அந்த மர்ம நபர்களைபோலீசார்தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் அருகிலுள்ள பெரியபாபுசமுத்திரத்தைச் சேர்ந்தவர்ஐயனாரப்பன்.

இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடுகாரணமாகப்பிரிந்துள்ளனர். இவரது மனைவி தாய்வீட்டுக்குச்சென்று விட்டார்.ஐயனாரப்பன்பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். அவருக்கு உதவியாக 77 வயதுள்ள அவரது அத்தைசுந்தராம்பாள்உடனிருந்து கவனித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காலை ஏழு மணி அளவில் அவர்களது வீட்டிற்கு 2 மர்ம நபர்கள்பைக்கில்வந்துள்ளனர். தாங்கள் நாட்டுமருந்து கொடுப்பவர்கள் எனவும் எங்கள் மருந்தை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்களையும் குணப்படுத்தும்எனக்கூறியுள்ளனர். இதை நம்பியசுந்தராம்பாள், ஐயனாருக்கு வைத்தியம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர்கள் இருவரும் மூலிகை எண்ணை எனக் கூறிஐயனாரப்பன்கைகளில் ஒருதிரவத்தைத்தடவி உள்ளனர்.

பின்னர்சுந்தராம்பாளிடமும்நீங்களும்எண்ணைத்தேய்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உடல் வலி சரியாகும் என்று கூறி உள்ளனர். அப்போதுசுந்தராம்பாள்எண்ணெய்தேய்ப்பதற்காகத்தனது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் பவுன்சங்கிலியைக்கழற்றி வைத்துவிட்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த இருவரும்சுந்தராம்பாளின்தங்கச்சங்கிலியைஎடுத்துக்கொண்டு தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். நாட்டு மருத்துவம் பார்ப்பதாகக் கூறி வயதான தன்னிடம் தங்கச்சங்கிலியைப்பறித்துச் சென்றது பற்றிசுந்தராம்பாள்கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். நாட்டு மருத்துவர்கள் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருபவர்களைபோலீசார்தேடி வருகின்றனர்.

Advertisment

தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இது போன்று நாட்டு மருத்துவம் செய்வதாகக் கூறி பல கிராமப்புறங்களில் சென்று அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்கள்கவனத்தைத்திசை திருப்பி பணம் நகை பறிக்கும் கும்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. காவல்துறை இந்த மோசடி கும்பலை விரைவில் பிடிக்க வேண்டும் இல்லையேல் இதுபோன்ற மோசடிகள் சாதாரண ஏழை எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களிடம் தொடரும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.