Skip to main content

மர்மக் காய்ச்சல்... மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி! 5 பேர் காய்ச்சலால் அனுமதி!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் காய்ச்சல், வாந்திக்கு 2 மாணவர்கள் பலியானதைத் தொடர்ந்து நகராட்சி மருத்துவத்துறையினர் அங்கு முகாமிட்டு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் டி.டி.டி.ஏ. பள்ளி வளாகத்தில் மனவளச்சி குன்றியோர் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 45 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் அங்கேயே தங்கிப்படிக்கும் மாணவர்கள் 30 பேர் வரை உள்ளனர். இது தவிர சில மாணவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்களை அவர்களது பெற்றோர்கள் பள்ளியில் கொண்டுவந்து விட்டு பின்னர் மாலையில் அழைத்துச்செல்வர். தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். மேலும் வெளியில் இருந்து நன்கொடையாளர்கள் மூலமும் உணவு வழங்குவது உண்டு.

 Mysterious fever in nellai


இந்தநிலையில் அங்கு படித்து வந்த கரிசல்குளத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மணிகண்டனுக்கு (13) கடந்த 3 தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் இறந்தார்.

 

 Mysterious fever in nellai


இதைத் தொடர்ந்து அதே பள்ளியில் பயின்ற ரெட்டியபட்டியைச் சேர்ந்த சண்முகப்பாண்டி மகன் பொன்னுச்சாமி (21) என்ற மாணவருக்கு ஞாயிற்றுக் கிழமை திடீரென்று வாந்தி ஏற்பட்டதாம்.பின்னர் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டதாம். இதனால் அவரை கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் அங்கு அவர் இறந்தார்.

 Mysterious fever in nellai


இதனால் சங்கரன்கோவில் நகராட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் இன்று அதிரடியாக அப்பள்ளிக்கு சென்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளி  மற்றும் வளாகத்தைச்  சுற்றிலும் மருந்து தெளித்தனர். குடிநீரில் புழுக்கள் ஏதும் உள்ளதா என சோதனையிட்டனர். மேலும் அங்கு மருத்துவ குழு மூலம் அங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். அதில் மேலும் 5 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனவளர்ச்சிகுன்றியோர் பள்ளியில் பயின்ற இரு மாணவர்கள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார் மற்றும் ஆட்சியர் ஷில்பா அங்கு விரைந்துள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் பேட்டி.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பரிபவுல் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் 2 மாணவர்கள்  இறந்தனர் இந்நிலையில் முதலில்  இறந்த மாணவன் இதய கோளாறு நோயால் இறந்து விட்டதாகவும் மற்றொரு மாணவன் மனநலிவு நோயால் அந்த மாணவனுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.

Next Story

ஆய்வில் விசித்திரம் காட்டிய மாவட்ட ஆட்சியர் !

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The collector Research pretending to be a patient in uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலம், பிரோஸ்பூர் பகுதியில் அரசு சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அங்குள்ள பணியாளர்கள், வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இந்த தொடர் புகாரின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் கிருதி ராஜ், அந்த மருத்துவமனையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஆட்சியர் கிருதி ராஜ் தலையில் முக்காடு அணிந்து ஒரு நோயாளி போல் அந்த மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த மருத்துவர், ஆட்சியர் கிருதி ராஜிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆட்சியர் கிருதி ராஜ், தான் யார் என்பதை தெரிவித்த பிறகு, அந்த மருத்துவமனையே ஆட்டம் கண்டுள்ளது. 

அதன் பின்னர், ஆட்சியர் கிருதி ராஜ் அந்த மருத்துவமனை முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வில், மருத்துவர்கள் முறையாக வருகை தராதது, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதது, காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவது என பல குற்றங்கள் கண்டறியப்பட்டது. 

இது குறித்து ஆட்சியர் கிருதி ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாய்க்கடிக்கு ஊசி போடுவதற்கு மருத்துவமனைக்கு  நோயாளி ஒருவர் சென்ற போது காலை 10 மணிக்குப் பிறகும் மருத்துவர் வரவில்லை என சுகாதார நிலையம் தொடர்பாக எனக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், நான் மறைந்திருந்து, முக்காடு போட்டுக் கொண்டு அங்கு சென்றேன். அப்போது மருத்துவரின் நடத்தை ஏற்புடையதாக இல்லை. மேலும், சிலர் மருத்துவமனைக்கு சரியாக வருகை தராதது தெரியவந்தது.

வருகை பதிவேட்டில் சிலரின் கையெழுத்து இருந்தாலும், சுகாதார நிலையத்தின் உள்ளே அவர்கள் இல்லை எனவும் தெரிந்தது. கையிருப்பில் உள்ள பெரும்பாலான மருந்துகள் காலாவதியாகிவிட்டன. சுகாதார மையத்தில் தூய்மையும் பராமரிக்கப்படவில்லை. இது குறித்து நாங்கள் மேலும் விசாரணை நடத்தவுள்ளோம்” என்று கூறினார்.