Skip to main content

மர்மவிலங்கு கடித்து பசுமாடு உயிரிழப்பு...  நடமாடுவது  சிறுத்தையா? அச்சத்தில் பொதுமக்கள்

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி கிராமத்தில் மர்மவிலங்கு கடித்து பசுமாடு உயிரிழந்தது. சிறுத்தை கடித்து உயிரிழந்தாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் மர்மவிலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அருகே அகரஆலம்படி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் தனசேகரன்(52), விவசாயக்கூலி தொழிலாளி. இவர் வீட்டில் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். பசுமாட்டை வீட்டின் பின்பக்கத்தில்  கட்டி வைப்பது வழக்கம்.

 

Mysterious animal...  The public fears


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் கட்டியிருந்த பசுமாட்டை மர்மவிலங்கு ஒன்று கழுத்தை கவ்வி கடித்து குதறியுள்ளது. இதனால் பசுமாடு சம்பவ உயிரிழந்துள்ளது. நள்ளிரவில் பசுமாட்டுக்கு வைக்கோல் போட தனசேகரன் சென்றுள்ளார். அப்போது பசுமாடு ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து அவர் சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கு தகவல் தந்தார்.

நேற்று காலை சம்பவ இடத்துக்கு  சென்ற போலீஸார் மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனசரக அலுவலர் சரவணகுமார் மற்றும்  வனத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த  மர்ம விலங்கின் கால்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

Mysterious animal...  The public fears


இதுகுறித்து சிதம்பரம் வனசரக அலுவலர் சரவணகுமார்  கூறுகையில், பசுமாட்டை கடித்திருப்பது சிறுத்தையோ, புலியோ அல்ல,விலங்கின் கால்தடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அது குள்ளநரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதன் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்துக்குமேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் தொடர்ந்து அகரஆலம்பாடி கிராமத்தை இருந்து கண்காணித்து வருவார்கள். பொதுமக்கள் சிறுத்தைபுலி என நினைத்து அச்சப்படவேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் யாரும் தனியாக வயல்வெளிக்கு செல்லவேண்டாம். பசுமாட்டை கடித்த விலங்கை இரண்டுநாட்களில் பிடித்துவிடுவோம் என்றார்.

இதுகுறித்து ஆய்வு செய்த புவனகிரி வட்டாட்சியர்  சத்தியன் கூறும்போது,  உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்க அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மர்ம விலங்கு கடித்து பசு மாடு உயிரிழந்தால் அக்கிராம பொதுமக்கள் சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளது என்று அச்சம் அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.