Skip to main content

என் கணவருக்கு நீதி வேண்டும்! பெரியார் பல்கலை ஆசிரியரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி கண்ணீர் வீடியோ! 

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

My husband needs justice! Periyar University teacher's wife

 

பெரியார் பல்கலையின் நிர்வாக சீர்கேட்டை தட்டிக்கேட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி பேராசிரியரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி, கணவருக்கு நீதி வேண்டும் என்று கோரி, கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.


சேலம், பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார் (32). கடந்த மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டத்தில், குமாரதாஸ் என்ற பேராசிரியருக்கு மீள் பணியமர்த்தம் செய்வது தொடர்பான பொருள்நிரல் வைக்கப்பட்டு இருந்தது. 


பேராசிரியர் குமாரதாஸ், நடப்புக்கல்வி ஆண்டில் ஜூன் மாதத்துடன் பணி நிறைவு பெறுகிறார். கல்வி ஆண்டுக்கு இடையில் பணி நிறைவு பெறும் பேராசிரியருக்கு மீள் பணியமர்த்தம் செய்யக்கூடாது என்று அரசாணை உள்ளது. அதை மேற்கோள்காட்டி, குமாரதாஸூக்கு மீள் பணியர்த்தம் தொடர்பான பொருள்நிரல் மீது விவாதம் நடத்தக்கூடாது என்று உயர்கல்வித்துறை செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அரசுத்தரப்பு சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு உதவி பேராசிரியர் பிரேம்குமார் கடிதம் எழுதி இருந்தார். 


சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்கு முன்பே அதன் பொருள்நிரலை கசிய விட்டது என்பது பல்கலை சாசன விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கூறி, பல்கலை நிர்வாகம் பிரேம்குமாரை கடந்த மார்ச் 5ம் தேதி அதிரடியாக பணியிடைநீக்கம் செய்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரேம்குமாரின் மனு மீது உரிய பதில் அளிக்கும்படி பெரியார் பல்கலைக்கு உத்தரவிட்டது. எங்கே வழக்கு தங்களுக்கு எதிராக முடிந்து விடுமோ என்று கருதிய பல்கலை நிர்வாகம், பிரேம்குமாரை ஏதாவது ஒரு வலுவான புகாரில் சிக்க வைக்கும் நோக்கில், அவரிடம் எம்.ஏ., படித்து வரும் பட்டியலின மாணவி ஒருவரை தூண்டிவிட்டு, பிரேம்குமார் மீது பாலியல் புகார், சாதி வன்கொடுமை புகார் கொடுக்க வைத்திருக்கிறது. 


அதன்பேரில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பிரேம்குமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புகாரைக்கூட அந்த மாணவி நேரில் கொடுக்கவில்லை. அவருடைய ஒப்புதலின்பேரில் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் அளித்திருக்கிறார். இதையடுத்து, உதவி பேராசிரியர் பிரேம்குமார் தலைமறைவானார்.


பிரேம்குமாரின் மனைவி உமாமகேஸ்வரி (30). இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் பதினைந்து நாள்களில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், கணவருக்கு எதிரான பெரியார் பல்கலையின் அடக்குமுறைகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் உமாமகேஸ்வரி, தன் கணவருக்கு நீதி வேண்டும் என்று, சமூக ஊடகங்கள் வாயிலாக கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ''என் பெயர் உமா மகேஸ்வரி. என் கணவர் பெயர் பிரேம்குமார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாள்களாக அவரைப் பற்றி ஊடகங்களில் செய்தி வந்து  கொண்டிருக்கிறது. 

 

My husband needs justice! Periyar University teacher's wife

 

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து, ஒரு ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை பல்கலை நிர்வாகம், அடக்குமுறையுடன் பணியிடைநீக்கம் செய்திருக்கிறது. கடந்த மார்ச் 5ம் தேதி பணியிடைநீக்கம் செய்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து என் கணவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர இருந்த நிலையில், அவரை பெரியார் பல்கலைக்கழகம் பழிவாங்கும் நோக்கத்தில், ஒரு மாணவியை தூண்டிவிட்டு, என் கணவருக்கு எதிராக சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளனர். 


பல்கலையின் முடிவை எதிர்த்து குரல் கொடுக்க வந்த மாணவர்களையும்  பெரியார் பல்கலைக்கழகம் அடக்குமுறையுடன் நடத்துகிறது. என் கணவருக்கு ஆதரவாக இப்போது வரைக்கும் பல்கலையில் இருந்து ஒரு ஆசிரியர் கூட குரல் கொடுக்க முன்வராதது வருத்தமாக இருக்கிறது. தனி ஆளாக நீங்க மட்டும் எதுக்கு போராடிக்கிட்டு இருக்கீங்க? இன்னும் ரெண்டு மூணு வாரத்தில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண், இந்த நேரத்தில் தன் கணவர் பக்கத்தில் இருக்கத்தான் விரும்புவாள். இந்த நேரத்தில் என் கணவர் என் கூட இல்லாமல், ஐந்து வயது கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாறிக்கிட்டு இருக்கேன். 


என் கணவரை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான புகாரையும், சஸ்பெண்ட் நடவடிக்கையையும் ரத்து செய்ய வேண்டும். என் கணவருக்கு நீதி கிடைக்கணும். எனக்கு என்ன செய்யறதுனு தெரியல. நீங்கள் என் கோரிக்கைக்கு செவி சாய்ப்பீங்கனு நம்புகிறேன்,'' என்று கண்ணீர் மல்க இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


உமாமகேஸ்வரியின் இந்த கண்ணீர் வீடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.