Advertisment

கோழைக்கு மனைவியா இருக்க முடியாது... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

anandhi

Advertisment

''ஹலோ... கடைசியா என் சிரிப்பை பாத்துக்கோங்க... யாரெல்லாம் பாக்கனுமோ என்ன... உங்களுக்காகத்தான் சிரிக்கிறேன். நான் சிரித்தால் எப்பவும் உனக்கு பிடிக்கும்தானேக்கா, அம்மாவுக்கும்தான், அண்ணாவுக்கும்தான், நம்ம குடும்பத்துல மாமா குழந்தைகளுக்கும்தான் எல்லாருக்கும் நான் சிரிச்சா பிடிக்கும்.

ஆனா இந்த வீட்ல நான் சந்தோஷமா சிரிச்சு வாழுறதுல யாருக்கும் பிடிக்கல... அதனாலத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். என் புருஷனே எனக்கு துணையா இல்லக்கா. அக்னிய சாட்சியா வைச்சுத்தா தாலிய கட்டினேன். ஆனா இங்க எதுவுமே இல்லக்கா...'' என்று ஒரு பெண் பேசும் வீடியோ வாட்ஸ் அப்புகளில் பரவியது.

இதுகுறித்து விசாரித்தபோது, சென்னை அருகே திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத் மனைவி ஆனந்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுடன் தேவநாத் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோரும் வசித்து வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில்தான் கணவர் வீட்டு கொடுமை தாங்க முடியாமல்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு முன் செல்போனில் தான் பேசும் வீடியோவையும் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

மாமியார் கொடூர குணம் கொண்டவர், மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாங்கொள்ளி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம். ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல். இவ்வாறு ஆனந்தி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

video Suicide husband wife
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe