Skip to main content

‘என் குப்பை என் பொறுப்பு’ - மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

‘My garbage is my responsibility’ - Students who raised awareness among the people

 

கரூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் 48 வார்டு பகுதிகளை நான்கு மண்டலங்களாகப் பிரித்து தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வுக்கு முன்பு மண்டல தலைவர்கள் மேற்பார்வையில் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் முன்னிலையில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்கள் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்துத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுடன் இன்று அனைத்து வார்டு பகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கபாளையம் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் தலா 50 மாணவர்கள் என நியமிக்கப்படுகின்றனர். நான்கு மண்டல தலைவர்கள் கீழ் இந்த குழுக்கள் செயல்பட்டு மாநகராட்சியைத் தூய்மை நகரமாக உருவெடுக்க பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகின்றன.  


இந்நிலையில், இன்று நடைபெற்ற என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்கள், குப்பையை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும் என மாநகராட்சியின் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வீடுவீடாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்கள் உட்பட்ட குழுவில் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.1500 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

 

கரூரில் என் குப்பை என் பொறுப்பு திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு காந்திகிராம அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.