Skip to main content

எனக்காக அண்ணன் படிப்பை துறந்தார்.. இன்று நான் தங்கம் வென்றேன்... தங்க மங்கை அனுராதா!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் அனுராதா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகூர் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். காவல்நிலையத்தில் பணி என்றாலும் பளுதூக்கி சாதிப்பதே லட்சியமாக கொண்டிருந்தார்.  இவர் கனவை நினைவாக்கும் விதமாக ஆஸ்திரேலியா  சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் 'ஸ்னாச்' முறையில் 100 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி தங்க பதக்கம் வென்றார். 
 

 My brother quit studying for me .. today i won gold ... Anuradha!

பளுதூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு பயிற்சியை பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு அவரது கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை விளையாட்டு வீரர்கள் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய அனுராதாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சார்பில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அனுராதாவை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி  வாழ்த்து கூறினார். பின்னர் திறந்தவெளி ஜீப்பில் ஊர்வலமாக சென்ற அனுராதாவிற்கு தெரு நடுவில் உள்ள மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் முதன் முதலில் அவர் பயிற்சி மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார். பின்னர் தான் பயிற்சி பெற்ற கூடத்தில் பயிற்சி உபகரணங்களை தொட்டுத் தழுவி முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  போது.. 

 My brother quit studying for me .. today i won gold ... Anuradha!


பல தடைகளைத் தாண்டி தான் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் தனது கல்வியைத் துறந்தும் அம்மா கூலி வேலை செய்தும் தான் என் சாதனைக்கு வித்திட்டனர்.
மேலும்  தமிழகத்தில் பின்தங்கிய கிராமங்களிலிருந்து வரும் பெண்கள் சாதிப்பது என்பது சவாலாகவே உள்ளது. பல தடைகளைத் தாண்டித்தான் பெண்கள் சாதிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற சாதனை மேற்கொண்ட தடகள வீரா்கனை சாந்தி, கோமதி மாரிமுத்து பிரச்சனைக்கு உள்ளானது ஏன் என்று தெரியவில்லை.

நான் அடிப்படையான சாதாரண  விளையாட்டு உபகரணங்களில் பயிற்சி எடுத்தே காமன்வெல்த்தில் தங்கம் வென்றேன். உலகத்தரம் வாய்ந்த உபகரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்.  ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் விளையாட்டு துறையில் சில அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளது. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் பல கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்னைப்போல் சாதிப்பார்கள்.  நான் பின்தங்கிய பகுதியில் இருந்து வந்ததால் வருங்காலங்களில் பின்தங்கிய கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன். பேருந்து வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் பிறந்து இந்த அளவிற்கு சாதனை படைத்ததற்கு தங்கள் கிராம மக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம்.  அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று அனுராதா கூறினார்.

பின்னர் அனுராதாவின் வெற்றிக்கு காரணமாக உள்ள அவரது சகோதரர் மாரிமுத்து பேசுகையில்:- 
தனது தங்கை மிகுந்த சிரமத்திற்கு இடையில் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார் எங்கள் கிராமமே மகிழ்ச்சியாக உள்ளது, அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியமாகக் கொண்டு உள்ளார் அரசு அதற்கு தேவையான உதவிகளை செய்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார், மேலும் எங்கள் சொந்த ஊரான நெம்மேலிப்பட்டியில் அனுராதா பயிற்சி தொடக்கத்திலிருந்து இன்று வரை போதுமான அளவு பேருந்து வசதி கூட இல்லை. தங்கள் ஊருக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் அனுராதா போன்று மேலும் பல பெண்கள் இதுபோன்ற சாதனைகளை புரிவார்கள்.  இதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தங்கள் பகுதியில் பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் அவர் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.