Skip to main content

திரையில் காட்டுவதற்கு என் உடல் தயாராகி வருகிறது! - ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி!

Published on 21/08/2018 | Edited on 27/08/2018
sri redddy


ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கோணத்தில் சிந்தித்து, தன்னை வெளிப்படுத்துபவராக இருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சென்னையை நேசிப்பதாகச் சொல்லும் அவர், திரையில் காட்டுவதற்கு என் உடல் தயாராகி வருகிறது என, அதிரடியாக இன்று ட்வீட் செய்திருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன் ஹைதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர் அல்லவா? துணிந்து எதுவும் செய்வார்! விசித்திரமான நடவடிக்கைகள், இவரை எங்கே கொண்டுபோய் விடுமோ? ஸ்ரீரெட்டிக்கே வெளிச்சம்!
 

sri redddy


ஸ்ரீரெட்டியின் ட்வீட் மொழியை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றுடல் என்று சொல்லவில்லையே! முழுமூச்சாகப் பயிற்சிகளில் ஈடுபட்டு, உடையுடன் உடலைச் சிக்கென்று காட்டுவதற்குத் தயாராகி வருவதைத்தான், அவருடைய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீரெட்டி என்று விளக்கம் தருகிறார்கள்.

அட போங்கப்பா! தன் டைரியைப் புரட்டிக்கொண்டேதான் இருக்கிறார் ஸ்ரீரெட்டி. புதிது புதிதாய்ப் பூதங்களும் கிளம்பியவாறே உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

''மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஆகாயத்திற்கா செல்லும்..?'' ஸ்ரீரெட்டி விமர்சனம்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரங்கை  அறிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி மோடியின் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சமூகவலைத்தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில்..

 

fdgfd

 

''மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?'' என பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 

Next Story

சேதப்படுத்தப்பட்ட ஸ்ரீரெட்டி கார்! தமன்னா வெப் சீரிஸ் டீம் குறித்து போலீஸில் புகார்...

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தவர் ஸ்ரீரெட்டி. இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலுள்ள பல பிரபலங்கள் பற்றி மீடூ புகாரளித்தார். இதில் சில தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்தும் மீடூ புகாரளித்திருந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
 

sri reddy

 

 

அண்மையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பதிவில், தமன்னா நடித்து வரும் வெப் தொடர் அவரது வீட்டிற்கு அருகே நடைபெறுவதாகவும் அதனால் பெரும் தொல்லையாக இருக்கிறது. நேரில் போய் அவர்களிடம் பிரச்சனை குறித்து பேச இருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது. “எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் ‘பங்களா வீடு’ உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.