Skip to main content

எனக்குப் பொறந்த குழந்தை சார் – கதறும் அப்பா! தகாத உறவால் சுக்குநூறாக நொறுங்கும் குடும்ப உறவுகள் !

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதி  உள்ளது  சிறுகனூர் காவல்நிலையம். இங்கே நடந்த ஒரு குடும்பப் பிரச்சனையும், அதன் விசாரணையும், ஒரு நீதிமன்ற தீர்ப்பை வைத்து நடத்திய விசாரணையும் இனி திருமணம் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling


 

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தில் கனகராஜ் 12ம் வகுப்பு வரை படித்தவர் என்றாலும் ஓட்டல் தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் சென்னையில் ஒரு ஓட்டலும் தன்னுடைய சொந்த கிராமத்தில் அப்பா அம்மாவுக்கு ஒரு ஓட்டலும் வைத்து நடத்துகிறார். கடுமையான உழைப்பு நல்ல வருமானத்தைத் கொடுத்ததால் கனகராஜிக்கு திருமணத்திற்க பெண் பார்க்க ஆரம்பித்தனர்.  துறையூர் அருகே உள்ள கீராம்பூர் என்கிற கிராமத்தில் இருந்து சரண்யா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.

 


 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling



4 ஆண்டுகள் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை பிறந்து .இரண்டரை வயது ஆகிறது. சரண்யாவை ராணி போன்று வைத்துக்கொள்கிறார்கள். கனகராஜின் அம்மாவும், அப்பாவும்.

 

இந்த நிலையில் சரண்யா கனகராஜிடம் நான் பிசிஏ படிச்சிருக்கேன் மேல படிக்கணும் வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு என்று கொஞ்சி கேட்க சரண்யா மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில் அருகே உள்ள துறையூர் பகுதிக்கு படிக்க அனுப்பி வைத்தான்.


 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling



திடீரென்று  ஒரு நாள் நீங்க சரண்யா புருஷன் கனகராஜ் தானே என்று வந்த செல் போன் தகவல் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் சரண்யா படிக்கும் காலேஜ்ல இருந்து பேசுறேன் நீங்க சரண்யாவோட செல்போனை வாங்கிக் கொஞ்சம் பாருங்க, என்று பகீர் சொல்லி இணைப்பை துண்டித்து அந்தப் பெண் குரல். இந்தத் தகவலை கேட்டதில் இருந்து கனகராஜீக்கு கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையாக இருந்தது.

 


 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling



வீட்டிற்கு வந்ததும் சரண்யாவின் செல்போனை புடுங்கி பார்த்தால் தன்னோட ஆசை மனைவி வேறு ஒருவனுடன் எடுக்கக் கூடாதா படங்கள் நிரம்பி கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியான ஆத்திரத்தில் சரண்யாவை அடித்தார் கனகராஜ். சரண்யா அழுது கொண்டே நா தப்பு பண்ணிட்டேங்கே அவன் பெயர் செல்வம் எங்க ஊர்காரன் தாங்க சின்ன வயசுல இருந்தே பழக்கம். அவனைத் தான் கல்யாணம் பண்ணணும் நினைச்சேன். இரண்டு பேரும் வேற வேற ஜாதி என்பதால் அது நடக்காமலே போயிடுச்சு. எனக்கு உங்களோட திருமணம் ஆயிடுச்சு அவனுக்கு அடுத்துத் திருமணம் ஆகிடுச்சு இரண்டு குழந்தைகள் இருக்கு இப்ப தீடீர்ன்னு பார்த்தவுடன் பழைய பழக்கத்தில் தப்புப் பண்ணிட்டேன். இனிமே நான் அந்தத் தப்புப் பண்ணமாட்டேன் என்று சொல்லி  கெஞ்ச அவளுடைய பேச்சில் மயங்கி சரி இனிமே ஒழுங்க இரு என்று மன்னித்தான் கனகராஜ்.

 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling


 

ஆனால் இந்தப் பிரச்சனை அடங்குவதற்குள் அடுத்தச் சில நாட்களில் சரண்யா கனகராஜ் மற்றும் அவர்கள் அம்மா அப்பா எல்லோருக்கும் குழம்பில் மயங்க மாத்திரை கலந்து இரவு நேரத்தில் சாப்பிட வைத்து இரவில் அவர்கள் மயங்கி தூங்கிய பிறகு குழந்தை எடுத்துக்கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவானார்கள். அயந்து தூங்கி எழுந்த போது தன் மனைவி சரண்யாவும் குழந்தையும் காணவில்லை என்று தெரிந்ததும் பதறி அடித்து நாலாபுறமும் தேடி கடைசியில் என் மனைவியும், குழந்தையும் மீட்டுத் தாருங்கள் என்று சிறுகனூர் காவல்நிலையத்தில் கொண்டு போய்ப் புகார் கொடுத்துக் கதறினார் கனகராஜ்.

 


 

சிறுகனூர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் ராஜா செல்வத்தோட அம்மா அப்பாவை அழைத்து விசாரணையைத் துவங்கியது போலிஸ். இப்படியே நான்கு நாட்கள் ஓடிய நிலையில் தீடிர்ன்னு கனகராஜிக்குச் செல்போனில் பேசிய  சரண்யானவின் கள்ளக் காதலன் நாங்க இரண்டு பேரும் துறையூரில் தான் இருக்கோம். நீ அங்க வா ! சரண்யா உன்னோட வரன்ணேன்னு சொன்னா கூட்டிட்டு போ இல்லன்னு அப்படியே போயிடு என்று பேச ஆத்திரத்தை அடக்கி கொண்ட கனகராஜ் உடனே அங்கே வரேன் என்று உறவினர்கள் அழைத்துக்கொண்டு துறையூர் பேருந்து நிலையத்திற்கு அவதி அவதியாய் கனகராஜ் குடும்பத்தினர் போய் சேர.


 

பஸ்ஸாண்டில் போய் இறங்கியது கனகராஜ் தன் மனைவியைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தைக் கடுமையாகத் தாக்கினார். இவர்களின் சண்டையில் பொதுமக்கள் கூட்டம் கூடியதும் எல்லோரையும் துறையூர் காவல்நிலையத்திற்கு அள்ளிக்கொண்டு போனது. தகவல் சிறுகனூர் காவல் நிலையத்திற்குச் சென்றது. இன்ஸ்பெக்டர் ராஜா அனைவரையும் அள்ளிபோட்டுக்குக் கொண்டு விசாரணையைச் சிறுகனூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணையை ஆரம்பித்தார்.

 

 My baby- crying daddy!-Family relationships that are crumbling


 

கனகராஜ், என் மனைவியை ஆசையாகக் கல்யாணம் பண்ணி அவ படிக்கணும் 1 இலட்சத்துக்கு மேல் செலவு பண்ணி படிக்க வச்சேன். அவளை இந்தச் செல்வம் கூட்டிக்கிட்டு போய் எனக்குத் துரோகம் பண்ணிட்டான். அதனால் செல்வத்தின் மீதும், என் மனைவி சரண்யா மீதும்  வழக்குப் பதிவு செய்யுங்கள். என் குழந்தையை எனக்குத் தாருங்கள் என்று புகார் வாசித்தார்.

 

உடனே இன்ஸ்பெக்டர் ராஜா இவுங்க இரண்டு பேர் மீதும் கேஸ் போடமுடியாது. அவுங்க இரண்டு பேரும் விருப்பபட்ட யார் கூட வேணா இருக்கலாம். நான் எதுவும் பண்ண முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியிருக்கு. நா என்ன செய்ய என்று கேட்க, சரண்யாவும், செல்வமும் என்ன சொல்றாங்களோ அதைப் பொறுத்து தான் இருக்கு என்று இன்ஸ் ரமேஷ் அவர்கள் இரண்டு பேரின் முகத்தைப் பார்த்தார்.

 

உடனே சரண்யா எனக்குக் கனகராஜீம் வேண்டாம் அவன் குழந்தையும் வேண்டாம் நா செல்வத்தோட போறேன் என்று எழுதி கொடுத்து அங்கிருந்து கிளம்பினார். வெளியே செல்வத்தின் மனைவி இரண்டு குழந்தைகளைக் கையில் வைத்து அழுது கொண்டிருக்க, அங்கே இருந்த செல்வத்தின் அம்மா அப்பா, இவன் என்னோட புள்ளையே கிடையாது அவன் செத்து போயிட்டான். இனி எங்களோட சொத்துக்கு வாரிசு என் மருமகள் தான் அழைத்துக்கொண்டு கண்ணீரோடு சென்றனர்.


 

கனகராஜீன் உறவினர்கள் டேய்… கனகராஜ் அந்தப் புள்ளைய அவ கிட்ட குடுத்திடு.. உனக்கு வேற திருமணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்ல கடுப்பான கனகராஜ் இவ எனக்குப் பொறந்த குழந்தை ! , இவள நானே வளர்க்கிறேன். எனக்குக் கல்யாணமே வேணாம் ! . இவ எனக்குப் பொறந்த குழந்தை என்று தோளில் போட்டுக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
 



சட்டங்கள் கடுமையாக்கும் போது தான் நியாயம் கிடைக்கும் என்பார்கள். ஆனாலும் அதில் உள்ள ஓட்டைகள் மூலம் பணத்தின் துணையோடு பலர் தப்பித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் சட்டத்தின் சில சலுகைகள் நாம் ஆண்டாண்டு காலமாக நம்பிக்கொண்டிருந்த ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது என்பதைத் தான் இதைப் போன்ற சம்பவங்கள் காட்டுகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.