Skip to main content

"ஆளுநர் தாமதிப்பதால் அரசாணை வெளியீடு" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

Muthuramalingam Thevar tamilnadu cm and deputy cm, ministers

 

'7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது ஜெயந்தி விழா மற்றும் 58 -ஆவது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

 

Muthuramalingam Thevar tamilnadu cm and deputy cm, ministers

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் முத்துராமலிங்கத் தேவர். இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி சுதந்திர வேட்கையை விதைத்தவர் முத்துராமலிங்கத் தேவர். வாழ்நாளில் 4,000 நாட்களைச் சிறையில் கழித்தவர் அவர்.

 

மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது. அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சிகளோ கோரிக்கை வைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உள்ளோம்.

 

Muthuramalingam Thevar tamilnadu cm and deputy cm, ministers

 

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அதிகளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி- குண்டாறு திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அ.தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மீனவர் திட்டங்களுக்காக அதிகம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது அ.தி.மு.க அரசுதான்." இவ்வாறு முதல்வர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்பில் மகேஷ் மரியாதை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Anbil Mahesh respects the statue of Muthuramalinga Thevar

 

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன்,  மூக்கன்,  லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல்,  சிவாகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

Next Story

"தேவரின் தேசிய சிந்தனைகளை பாடமாக கற்றுத்தர வேண்டும்" - வைரமுத்து விருப்பம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vairamuthu about muthuramalinga thevar

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா இன்று (30.10.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவர் திருமகன் என்பது ஒரு இனப்பெயர் அல்ல. தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. அருள்கூர்ந்து தமிழ் சமூகம் தேவர் பெருமகனை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் அல்ல. தேவர் பெருமகன் சொன்ன சொல். 

 

தேவர் திருமகன் சொன்னார், எனது ஆறு மாதத்தில் தாயை இழந்தேன்; எனக்குப் பாலூட்டியவர் ஒரு முஸ்லிம் தாய், கல்வி கொடுத்தோர் கிறித்துவப் பாதிரிமார்கள் என் பெற்றோர் இந்துக்கள், இதில் எங்கே இருக்கிறது சாதி? என கேட்டார். அவரை சாதி என்ற வட்டத்தை விட்டுவிட்டு தேசியம் என்ற பெரும் சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்னார், 2 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றேன். இதில் என் சமுதாய ஓட்டுகள் வெறும் 18 ஆயிரம் தான். மீதமுள்ள ஓட்டுகள் எல்லாம் அத்தனை சமூகவத்தரும் இட்டு வெற்றிபெற செய்தார்கள் என்றார். அந்த வட்டத்தை விட்டு அவரை வெளியே கொண்டு வந்து அவரது தேசிய சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை, அவரது தியாகத்தை, ஒரு பெரிய பாடமாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

இன்னொன்று, தேவர் என்று சொன்னால், அது சாதிய அடையாளம் என்று ஒரு குறிப்பிட்ட வட்டம் என்பது இல்லை. உ.வே சாமிநாத ஐயர் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, வ.உ சிதம்பரம் பிள்ளை என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, லட்சுமண சாமி முதலியார் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, இவையெல்லாம் அவர்களின் குடி அடையாளம். என் தந்தை வரைக்கும் தேவர் என்ற பட்டத்தை வைத்து கொண்டது அவர்களின் அடையாளம். நான் வைத்துக்கொள்ள போவதில்லை என்பது எனது சமூகசீர்திருத்தம், எனது உள்ளம். எனவே பழைய பெயர்களை அழித்து விட வேண்டாம். புதிதாக யாரும் சாதி பெயர்களை வைத்து கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோளாக இருக்கிறது. அம்பேத்கரை எல்லா சமூகமும் கொண்டாட வேண்டும் என்பதை போல தேவரையும் அனைத்து சமூகமும் கொண்டாட வேண்டும்" என்றார்.