சுதந்திர தின விழாவில் மோடி ஆற்றிய உரையை ப.சிதம்பரம் வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் வரவேற்றது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பேசியுள்ளது. “பிரதமர் மோடி சொல்வதை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு வந்திருப்பதாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், என்ன நிர்பந்தம் என்று ப.சிதம்பரத்திற்கும், நரேந்திரம் மோடிக்கு மட்டுமே தெரியும் என்று அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்திப்பில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.