Skip to main content

தண்ணீர் திறந்தவுடன் அவசர, அவசரமாக ஆறு, வாயக்கால்களை துடைக்கின்றனர்; முத்தரசன் சாடல்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

"ஆறு மாதங்களாக எந்த பணியையும் தொடங்காமல் மெளனிகளாக இருந்துவிட்டு தண்ணீர் திறந்தவுடன் அவசரகதியில் தூர்வாருகிறோம் என்கிற பெயரில் வாய்க்கால்களை துடைத்து விட்டு கொள்ளையடித்து கொண்டிருக்கின்றனர் அதிகாரிகளும் அதிமுகவினர்,"  என்கிறார் முத்தரசன்.

 

c

 

வரும் 4, 5, 6 ஆம் தேதிகளில் விவசாய தொழிலாளர்கள் சங்க தேசிய பொதுக்குழு கூட்டம் நாகையில் நடைபெற இருக்கிறது. ஐந்தாம் தேதி வேலை உறுதியளிப்பு திட்ட மாநாடும் நடக்கிறது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பலரும் கலந்து கொள்கின்றனர். அதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தமிழகத்தின் நிலவரங்கள் குறித்துப்பேசினார், " காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது.

 

நடப்பாண்டில் தூர்வார கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணித்துறை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறு மாதமாக எந்த பணியையும் தொடங்காமல் இருந்து விட்டு தண்ணீர் திறந்தவுடன் அவசர, அவசரமாக தூர்வாருகிறோம் என்கிற பெயரில் வாய்க்கால்களை துடைப்பான்களை கொண்டு துடைத்துவருகின்றனர். அதிமுகவினரும் அதிகாரிகளும்.

 

 மேட்டூர் அணை திறந்து ஒரு மாத காலமாகியும் திருவாரூர் நாகை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பட்டுக்கோட்டை, திருப்பனந்தாள், மணல்மேடு, உள்ளிட்ட எந்த பகுதிகளுக்கும் தண்ணீர் வரவில்லை விவசாயத்திற்கு கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இனியும் தாமதிக்காமல் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

 

அதேபோல் நிபந்தனையின்றி கூட்டுறவு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்த வேண்டும்." என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.