Skip to main content

முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே.. போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு..!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

Mutharaiyar vote for Mutharaiyar Poster pasted in viralimalai

 

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே அந்தந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அனைத்துக் கட்சியிலும் சீட்டுக் கொடுக்க வேண்டும், வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது வழக்கம். இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்றுள்ள நிலையில், மீண்டும் 3வது முறையாக போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். 

 

தனக்கு இந்தத் தொகுதிதான் என்பதால் 6 முறை தனது சி.வி.பி. பேரவை சார்பில் சொந்த செலவில் நலத்திட்டங்களும் வழங்கியுள்ளார். ஆனால், கடந்த 3ஆம் தேதி இந்த தொகுதிக்கு ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் நெவளிநாதன் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தார். தொடர்ந்து பாஜக தேர்தல் அலுவலகம் திறந்து தங்களுக்கு சீட்டு வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் அனைவரும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (06.03.2021) ‘முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே. விராலிமலை தொகுதியில் முத்தரையர் வாக்குகள் அதிகமாக உள்ளதால் முத்தரையருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்’ என்று போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து விராலிமலை ர.ர.க்கள் கூறும்போது, “கடந்த காலத்தில் முத்தரையர் பிரச்சனையில் அமைச்சர் சிக்கியதும் உடனே அதனை சரி செய்து புகார் கொடுத்த சொக்கலிங்கத்தை தன்னுடன் வைத்துக்கொண்டதோடு, தொடர்ந்து கட்சி பதவி, வாரியப் பதவிகளையும் கொடுத்து உடன் வைத்திருப்பதால் முத்தரையர் மக்கள் அமைச்சர் பக்கம் ஆதரவாக இருப்பார்கள்” என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான நீச்சல் தொட்டியில் மூதாட்டியின் சடலம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023
nn

 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள நீச்சல் தொட்டியில் மூதாட்டி ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ஓலைமான்பட்டியில் தோட்டத்தில் நீச்சல் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தின் வழியே சென்ற 83 வயது மூதாட்டி பாலாயி என்பவர் நடந்து சென்றபொழுது கால் இடறி உள்ளே விழுந்ததாகவும், இதில் மூதாட்டி இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

Next Story

விராலிமலையில் சாலை விபத்து; ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Road accident in Viralimalai; People are struggle because the ambulance is not comingnn

                                                      கோப்புப்படம் 

புதுக்கோட்டையில் சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் மோதி 4 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை ஆம்புலன்ஸ் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். அதே நேரம் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்யவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கார் ஓட்டுநரை கைது செய்யக் கோரியும், ஆம்புலன்ஸ் வராததைக் கண்டித்தும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.