அகில இந்திய முஸ்லிம்லீக்கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி அரியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர்மாவட்டச்செயலாளர்மஹதுதலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முஸ்லிம்லீக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முகைதீன், பொதுச் செயலாளர்ஜாவித்உசேன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலைசெய்யத்தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.