Skip to main content

‘மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா...’ - சிவகங்கையைக் கலக்கும் பிரியாணி பாய்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

A Muslim family that serves biryani to everyone regardless of religion

 

"ஹே ஜாகீர்.. எல்லாருக்கும் பிரியாணி கொடு.. யாரையும் வெயிட் பண்ண வெக்காத.. முருகன் வந்தாலும் கொடு.. டேவிட் வந்தாலும் கொடு" என சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அன்வாரிய்யா குடும்பத்தினரால் சிவகங்கை முழுவதும் மணக்கிறது.

 

சிவகங்கை மாவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் அன்வாரிய்யா. இவரது குடும்பத்தினர் கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாள்தோறும் பிரியாணி தயாரித்து மருத்துவமனை வாசலிலேயே ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உணவளித்தார்கள். இதனால் அன்வாரிய்யா குடும்பத்தினர் அப்பகுதியில் மிகவும் பிரபலம்.

 

இந்நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வான ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் நோன்பை தொடங்குவதற்கு முன்பாக ஸஹர் என்ற உணவை அதிகாலையில் உண்பது வழக்கம். இதையடுத்து நோன்பு மேற்கொள்ளும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு அன்வாரிய்யா குடும்பத்தினர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அன்வாரிய்யா குடும்பத்தினரே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர்.

 

அதே சமயம், உணவு தேவைப்படும் முஸ்லிம்கள் அவர்களது வாட்ஸ்ஆப் அல்லது மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் உணவு வழங்கப்படுகிறது. தற்போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இருப்பினும், அன்வாரிய்யா குடும்பத்தினர் எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் தங்களது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றனர். சேவை மனப்பான்மையுடன் அனைவருக்கும் உணவளிக்கும் அன்வாரிய்யா குடும்பத்தினர் அந்த வட்டாரத்தையே மணக்கச் செய்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.