Skip to main content

கொண்டாடப்பட்ட மக்கள் இசை! சூப்பர் சிங்கர் -6ன் வின்னர் செந்தில்கணேஷ்!

Published on 15/07/2018 | Edited on 17/07/2018
senthil

 

சூப்பர் சிங்கர் போட்டியில் மக்கள் இசை கலைஞர் செந்தில்கணேஷ் முதலிடம் பிடித்து  வெற்றி பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.  இந்நிகழ்ச்சியின் 6 -வது சீசன் இறுதிப்போட்டி இன்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  செந்தில்கணேஷ், ரக்‌ஷிதா, மாளவிகா, அனிருத், சக்தி, ஸ்ரீகாந்த் ஆகிய 6 பேரும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

 

 

 

 

 

 


மக்கள் இசை கலைஞர் செந்தில்கணேஷின் வருகையின் போதும், அவர் ஒவ்வொரு பாடலை பாடி முடித்தபோதும் அரங்கத்தினர் அதிக ஆரவாரம் செய்து மக்கள் இசையை கொண்டாடினர்.  அவர், ’புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே..’என்ற பாடலை பாடி முடித்தபோது, அரங்கத்தினர் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.  பாடகர்கள் மாணிக்கம் விநாயகம், வீரமணி ஆகியோர் மேடைக்கே சென்று வாழ்த்தினர். அப்போது மாணிக்கம் விநாயகம், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவிடம், ’50 லட்சம் வீடுதானே பரிசா கொடுக்குறாங்க.  இவன் பாட்டுக்கு 3 வீடு கொடுக்கணும்’என்று வாழ்த்தினார்.

 

 

 

 

 

 

 

 


நிகழ்ச்சியின் இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் செந்தில்கணேஷ் சூப்பர் சிங்கர் டைட்டிலை தட்டிச்சென்றார்.  அவருக்கு 50 லட்சத்திற்கான வீடும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பும் பரிசாக கிடைத்தன. அவர் வெற்றி பெற்றதும், மக்கள் இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து மகிழ்ந்தார்.  இது மக்கள் இசைக்கு கிடைத்த வெற்றி என்று சொன்ன செந்தில், மக்கள் இசையை இன்று உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட செய்த விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, தான் அழைத்து வந்திருந்த மக்கள் இசைக்கலைஞர்களை மேடையேற்றி அவர்களின் திறமைகளையும் உலகறியச்செய்தார் செந்தில்கணேஷ்.

இப்போட்டியில்,  ரக்‌ஷிதாவுக்கு 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டது.  2 லட்சம் பரிசு பெற்றார் மாளவிகா. டைட்டில் வின்னருக்குத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு என்று இருந்தபோதும்,  தன் இசையில் பாடும் வாய்ப்பை ஸ்ரீகாந்துக்கும் வழங்கியிருக்கிறார் ரகுமான் என்று அறிவிக்கப்பட்டது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது ரசிகர்களுக்கு.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நவராத்திரி கொலுவை ரசிகர்களின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட விஜய் டிவி ஸ்டார்ஸ்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

star vijay navaratri celebration

 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000க்கு மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்தேறியுள்ளது. 

 

பொதுமக்கள் கலந்துகொள்ள திரு விளக்குப் பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் எனப்  பல்வேறு நிகழ்வுகள் நடத்தியுள்ளது விஜய் டிவி. மொத்தமாக ஏழு நகரங்களில் நடந்த இந்த விழாவினில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் திரு விளக்கு பூஜை உட்பட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஊர்களிலும் மக்கள் அதிகம் கூடி, நவராத்திரி விழாவினை விஜய் டிவி உடன் இணைந்து கொண்டாடினர். ஏறத்தாழ 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இவ்விழாவினை ரசித்துள்ளனர். 

 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர் இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர். விஜய் தொலைக்காட்சி நவராத்திரி ஸ்பெஷலாக நடந்து முடிந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

 

Next Story

தமிழ்நாட்டில் ஏழு நகரங்களில் விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Vijay TV Navratri celebrations in seven cities in Tamil Nadu

 

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை,  பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப் பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது. 

 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர். திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாகக் கேட்டு மகிழலாம். அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம். 

 

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் 2023 நேற்று முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில்  கலந்துகொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்துகொண்டதை  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர். 

 

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னையில் இன்று (16 அக்டோபர் 2023),  ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023  திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023, தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023, மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யும்படியும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .