Advertisment

முருகன் சிலை மோசடி! விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகள்!

Palani

Advertisment

மொட்டைக்கு பெயர் போன பழனி முருகன் கோயிலுக்கு ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பது தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாசனமான ஞான தண்டாயுதபாணி (முருகன்) சிலை தான் பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில் உள்ளது. அப்படி பட்ட நவப்பாசன முருகன் தான் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து இந்த முருக பெருமானை தரிசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் போகரால் உருவாக்கப்பட்ட முருகனின் நவப்பாசன சிலை பழுதடைந்துள்ளதால் அதை மாற்றி அமைக்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கடந்த 2004ல் முதல்வராக இருந்த ஜெ.,விடம் வலியுத்தினார். அதை தொடர்து தான் அப்பொழுது இருந்த கோவில் இ.ஓ.ராஜா மூலமாக கும்பகோணத்தை சேர்ந்த அரசு சிலை சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம் பத்து கிலோ தங்கம் கொடுத்து ஐம்பொன்னால் 200 கிலோ அளவில் முருகனின் மூலவர் சிலை செய்ய சொல்லப்பட்டது. ஆனால் இஓ ராஜாவும், முத்தையாவும் விதி முறைப்படி ஐம்பொன் சிலை செய்யாமல் இருவரும் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக சிலையில் அதிகமாக செம்பு கலந்ததுடன் மட்டும்மல்லாமல் ஒரு துளி வெள்ளி கூடமுலாம் பூசாமலேயே 21 கிலோ கூடுதலாக சேர்த்து 221 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்து விட்டு சிலைக்கு பயன்படுத்த வேண்டிய 41/2 கிலோ தங்கத்தை மோசடி செய்து இருவரும் பங்கு போட்டு கொண்டு இச்சிலையை ஜெ., அனுமதியின் பேரில் அப்போதை மூலவ நவப்பாசன சிலையை மறைத்து வைத்தனர்.

Advertisment

Murugan statue

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்ததின் பேரில் அந்த ஐம்பொன் சிலையை அகற்றி ஸ்டோர் ரூமில் போட்டு விட்டனர். இந்த நிலையில் தான் அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்திருப்பது 14 வருடங்களுக்கு பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியான பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகளின் காதுக்கு எட்டியதின் பேரில் கடந்த சில நாட்களுக்கு சிலை செய்ததில் மோசடி செய்த ஸ்தபதி முத்தையாவையும், முன்னாள் கோவில் இ.ஓ.ராஜாவையும் சிலை தடுப்பு காக்கிகள் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து தான் அந்த மோசடி சிலை செய்ததில் அப்பொழுது யார், யார் பணிபுரிந்தனர் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக ஐ.ஜி. பொண்மாணிக்கவேல் தலைமையில் இயங்கிவரும் துணை கண்கானிப்பாளர் கருணாகரனுடன் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான சிலை தடுப்பு அதிகாரிகள் நேற்று பழனிக்கு வந்து முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்களை தற்பொழுது இ.ஓ.வாக இருக்கும் செல்வராஜ் சந்தித்தார். அப்பொழுது 2004 முதல் தற்பொழுது வரை பணிபுரிந்து வரும் அதிகாரிகளின் லிஸ்டை கேட்டதின் பேரில் இ.ஓ.செல்வராசும் அந்த லிஸ்டை கொடுத்து விட்டு போய் இருக்கிறார். அதை தொடர்ந்து தான் சிலை தடுப்பு காக்கிகள் இன்று விசாரணையில் குதிக்க உள்ளனர். இதை கண்டு கோவில் பணியாளர்கள் பலர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதால் இந்த சிலை மோசடியில் மேலும் பல அதிகாரிகள் சிக்கி கம்பி எண்ண போவதும் உறுதி.

statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe