Skip to main content

ஒவ்வொரு கொள்ளையிலும் குடியிருந்து கொள்ளையடிக்கும் முருகன் அட்ராசிட்டி!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

திருச்சி லலிதாஜீவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலையில் நடந்த கொள்ளையில் சிக்கிய கொள்ளையன் முருகன் தான் தற்போது அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்திகளில் இடம்பிடித்துள்ளான். அவனை பற்றி தினமும் ஒரு தகவல்கள் வெளியாகி வருகிறது.

முருகன் ஆந்திரா – கர்நாடகா – தெலுங்கனா ஆகிய மாநிலங்களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததும் தமிழகத்தில் 2018 ம் ஆண்டு முதல் கொள்ளையடிக்க ஆரம்பித்ததும். ஆனால் தமிழகத்தில் அவன் நடத்திய கொள்ளைகளில் அவன் பெயரை பதிவு பண்ணாமல் இருக்க காவல்துறை அதிகாரிகளுக்கு இலட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தது என தற்போது வெளியாகி அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.

 

Murugan Atraziti to plunder every burglary!


இந்த நிலையில் முருகன் கொள்ளையடித்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் அந்த ஏரியாவில் வாடகைக்கு குடியிருந்து கொள்ளையடித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்னதாக சென்னை பூஞ்சேரி கிராமத்திலிருந்து வந்திருப்பதாகக் சொல்லியும் பெரிய ரோடு போடும் ஒப்பந்தக்காரர் என்று சொல்லி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர், நருங்குழி நகர்ப் பகுதியில் வசிக்கும் ஷேக் அப்துல் கபூர் என்பவருக்குச் சொந்தமான வீட்டை சுமார் 60 ஆயிரம் முன்பணம் கொடுத்து, மாத வாடகை 6 ஆயிரம் பேசி அவரது மனைவி மஞ்சுளா மற்றும் மகன், மகள் ஆகியோருடன் தங்கியிருக்கிறான். முருகன் தங்கியிருந்த வீட்டுப் பக்கம் உள்ள தெருக்கள், சேறும் சகதியுமாக மாறிக் இருப்பதை பார்த்த முருகன், அப்பகுதி மக்களிடம் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளது. அரசாங்கத்தை நம்பி பலனில்லை. ஆளுக்கு 500 ரூபாய் கொடுங்க. நான் எனது சொந்தச் செலவில் சாலை போட்டுத் தருகிறேன் என்று பெரும் பணக்காரன் போல் காட்டியிருக்கிறான். கொள்ளையடித்து விட்டு ஆயுதபூஜை கொண்டாடிவிட்டு தான் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறான்.

 

Murugan Atraziti to plunder every burglary!


சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகில் உள்ள பஞ்சாப்நேஷனல் வங்கியை கொள்ளையடிப்பதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் டோல்கேட் அருகில் உள்ள தாளக்குடி அருகே அமிர்தா கேட்வே குடியிருப்பில் ரோடு போடும் ஒப்பந்தக்காரர் என்று சொல்லி 30,000 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து 6000 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருக்கிறான். வங்கி அருகே குடியிருந்ததால் அடிக்கடி வங்கி நோட்டம் பார்க்கவும் அவனுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

அதே போல ஒவ்வொரு வங்கி கொள்ளையின் போது தொடர் விடுமுறை நாட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தொடர்ச்சி 3 நாட்களுக்கு மேல் விடுமுறை உள்ளது போல் நாட்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சுவர்களை துளைபோடுவதை செய்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.