திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரை துளை போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளையில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருச்சியில் கொள்ளை நடந்து 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசிடம் சிக்கியிருக்கும் முருகனை காவலில் எடுக்கக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் இன்று திருச்சியில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அப்போது நேரில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனிடம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதேபோல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முருகன் வந்தபோது அங்கே வந்திருந்தமுருகனின் மனைவி மற்றும் மகனை பார்த்த முருகன் கண் கலங்கினான்.