Advertisment

தனிமைச்சிறையிலிருந்து மாற்றக்கோரி 3வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

m

வேலூர் சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் முருகன்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் அறையில் இருந்து கடந்த மாதத்தில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர் தனிமைச்சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால் கடந்த மாதம் தொடர்ந்து 17 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

Advertisment

இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென தனிமைச்சிறையில் இருந்து தன்னை மாற்றக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இன்றுடன் மூன்றாவது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.

Advertisment

Murugan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe