Skip to main content

இஸ்லாமிய நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்.! மூவர் காயம்.!! நால்வர் கைது..!!!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

 

v i

 

    நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய வரம்பிற்குள், முன்பகை காரணமாக வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய நிர்வாகிகளை அரிவாள், கத்தி மற்றும் இரும்புக்கம்பிக் கொண்டு கொலை முயற்சி சம்பவத்தினை அரங்கேற்ற, துரிதமாக செயல்பட்ட நெல்லை மாநகரக் காவல்துறை காயம்பட்டோர்களை மருத்துவமனையில் அனுமதித்தத்தோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளைக் கைது செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.


 

v i

 

   நெல்லை மேலப்பாளையம் சமாயினா ஷேக் முகம்மது மூப்பன் தெருவினை சேர்ந்த முகமது பஸ்லுல் இலாஹி மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் டி.என்.டி.ஜெ.எனப்படும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பினில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தவர்கள். சமீபத்தினில் கருத்து வேறுப்பாட்டின் காரணமாக அவ்வமைப்பிலிருந்து வெளியேறிய இவர்கள் அந்த அமைப்பிற்கு எதிராகவும், அதனின் தலைவருக்கு எதிராகவும் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அதனின் தொடர்ச்சியாக மத்ரஸாக்களில் படிக்கும் இஸ்லாமியப் பெண்களிடம் தவறுதலாக நடக்கின்றார் அவ்வமைப்பின் தலைவரான பி.ஜெயினுல்லாபுதீன் என்று கூறியதோடு மட்டு மில்லாமல், "ஆபாச ஆடியோவினையும்" வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர். " இது எதிர் தரப்பிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியதாகவும், அதனின் தொடர்ச்சியாக வீட்டிற்குள் இருந்த பஸ்லுல் இலாஹி, அவரது மகன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் மீது அரிவாள், கத்தி மற்றும் இரும்புக்கம்பிக் கொண்டு இன்று காலையில் கொடூரத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இதனை செய்ய தூண்டியதே டி.என்.டி.ஜெ.வின் தலைவர் பி.ஜெ. "என  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர் தாக்குதலுக்குள்ளான காயம்பட்ட மூவரும்.

 

   
  மேலப்பாளையம் போலீசாரும் கொடூரத் தாக்குதல் நடத்திய பாளையங்கோட்டை மண்ணெணி சையது அலி, கண்ணா ரசூல், பால் அக்பர், நவாஸ் ஆகியோரை விரைவாக கைது செய்து விசாரித்து வருகின்றது. இச்சம்பவத்தால் அங்குப் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.