Skip to main content

விவாகரத்து கேட்ட மனைவியை சேர்ந்து வாழலாம் என அழைத்து கொலை; புதுச்சேரி சபாநாயகர் வீட்டருகே நடந்த கொடூரம்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

புதுச்சேரியில் சபாநாயகர் வீட்டிற்கு அருகில் பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விவாகரத்து கேட்டு சென்ற மனைவியை சேர்ந்து வாழலாம் என கணவன் அழைத்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

murder in puduchery

 

புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா. காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கடைக்கு பால் வாங்கச் சென்ற கங்காவை சபாநாயகர் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். சபாநாயகர் வீட்டிற்கு அருகிலேயே இந்த கொலை சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

murder in puduchery

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கங்காவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் வீட்டில் இருந்த கங்காவின் கணவர் ராஜசேகரிடம் கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது மனைவி கங்காவின் நடத்தை சரியில்லை என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதால் அவர்களில் யாராவது இந்த செயலை செய்து இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் இந்த கொலை வழக்கில் கணவர் ராஜசேகர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட அதனை அடுத்து ராஜசேகரை பிடித்து முறையாக விசாரித்தபோது கங்கா கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

 

murder in puduchery

 

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்கு பின்னர் கங்கா சில ஆண்களுடன் தவறான பழக்கத்தில் இருந்ததாக  கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கங்காவை  பிரிந்து சென்ற ராஜசேகர் தனியாக வசித்து வந்துள்ளார். அதன்பிறகு மேலும் பல ஆண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது ராஜசேகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவரை தீர்த்துக் கட்ட நினைத்த ராஜசேகர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியை சாமர்த்தியமாக கொலை செய்ய திட்டமிட்டார்.

 

murder in puduchery

 

அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் மனைவி கங்காவிடம் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேர்ந்து வாழலாம் என்று கூற  கங்காகவும் சம்மதித்துள்ளார். இருந்தாலும் கணவர் ஓட்டுநர் வேலைக்கு சென்ற பின்னர் தனது ஆண் நண்பர்களுடன் கங்கா நெருங்கி பழகி வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு  இருவருக்கும் பிரச்சனை முற்ற கங்காவின் மொபைல் போனை பறித்து ராஜசேகர் உடைத்து போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்கா காலையில் தனியாக பால் வாங்க சென்ற தகவலை தனது கூட்டாளிகளுக்கு தெரிவித்த ராஜசேகர் மனைவி கங்காவை கொல்ல  உத்தரவிட்டார்.

 

murder in puduchery

 

இதனையடுத்து இரண்டு நாட்கள் ஒத்திகை பார்த்த கொலையாளிகள் வியாழக்கிழமை கொலை செய்து விட்டு தப்பினர்.கொலை நடந்த நேரத்தில்   ராஜசேகர் வீட்டில் இருப்பதால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என நினைத்து இந்த கொலையில் இருந்து தப்பிக்க முயன்று உள்ளார். ஆனால் அவரது நடவடிக்கைகள் மற்றும் அவரது தடுமாற்றத்தை வைத்தே ராஜசேகரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் இந்த கொலை செய்தது அவர் கூட்டாளிகள் தான் என்பதை உறுதிப்படுத்தினர். தற்போது ராஜசேகரின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.