Skip to main content

பண்ருட்டி வாலிபர் கொலையில் 3 பேர் கைது... கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
police

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்திலுள்ள பெரிய ஏரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய ஒரு வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி, சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் சக போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளியை தீவிரமாகதேடி வந்தனர். இந்தநிலையில் படுகொலைசெய்யப்பட்டவர் பண்ருட்டி ரகமத்துல்லா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பரக் மகன் சதாம் உசேன் வயது 33 என்பதும் இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சதாம் உசேன் வீட்டிலிருந்துவந்தபோது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கழுத்து அறுக்கப்பட்டு பெரியபட்டுஏரியில் சடலமாக விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

 

இந்த படுகொலை தொடர்பாக முக்கிய தடயங்களை வைத்து மூன்று பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அவர்கள் பண்ருட்டி பள்ளிவாசல் இமாம் சதாம் உசேனை எலவசனூர்கோட்டையை சேர்ந்த காசிம் அன்சாரி' அஷ்ரப் அலி யாசர் அரபாத உட்பட நான்கு பேர் சேர்ந்து சதாம் உசேனை கொலை செய்தது தெரியவந்தது.

 

இதையடுத்து காசிம் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி இருசக்கர வாகனம் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிவாசல் இமாம் அவர்கள் அவருடன் நட்பில் இருந்தவர்களே இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்து ஏரியில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் கடலூர் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை பண்ருட்டி ஆகிய பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குள் கொலையாளிகளை புலனாய்வு செய்தி கைது செய்து போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.