Skip to main content

திருத்தணி இரட்டைக்கொலையில் திடுக்... கைது செய்யப்பட்ட குற்றவாளி வாக்குமூலம்

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீட்டிபுதூர் பாலாஜி நகரை சேர்ந்த எம்.ஆர்.எப்  ஊழியர் பணப்பெருமாள். இவர் இரவு பணிக்கு சென்றுவிட வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி வீரலட்சுமியும், பத்து வயது மகனான போத்திராஜூம் கடந்த எட்டாம் தேதி அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டில் இருந்த 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

murder incident in thiruthani

 

திருத்தணி அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் அமைந்திருந்த வீட்டில் இப்படி கொலை, கொள்ளை சம்பவம் நடந்ததால் இதை நடத்தியது வடமாநில கொள்ளையர்கள் இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் 5 மணி அளவில் அந்த பகுதியில் காணப்பட்ட செல்போன் சிக்னல் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது இரட்டை கொலை பற்றிய மர்மம் வெளியானது.

 

murder incident in thiruthani

 

அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த வெங்கடேசன் பெருமாள் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். சிறுவயது முதலே பெருமாளின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சேர்க்கை சரி இல்லாததால் பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து கடனில் சிக்கித்தவித்த வெங்கடேசன் ஏதாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடலாம் என திட்டமிட வெங்கடேசன் தனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் புகுந்து கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்துதான்.

 

murder

 

 

murder

 

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பெருமாள் வீரலட்சுமி தம்பதி வசதியாக இருப்பதாகவும், கழுத்தில் 10 சவரன் தாலி சங்கிலி அணிந்திருந்ததால் லட்சுமியிடம் ஏராளமான நகை இருக்கக்கூடும் என வெங்கடேசன் அதன்படி கடந்த எட்டாம் தேதி பணபெருமாள் இரவு பணிக்கு சென்றதை அறிந்து அவரது மனைவி வீரலட்சுமி வாசலில் கோலம் போட வெளியில் வரும்பொழுது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துவிடலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற முகமூடியுடன்  வீட்டிற்கு வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளான்.

 

 

murder murder

 

தண்ணீர் வாளியுடன் வெளியே வந்ததும் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்துள்ளான் சிறிய இரும்பு கதவை தாண்டியபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்து இருக்கிறார் வீரலட்சுமி. அவரிடம் வீட்டிலுள்ள நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளான் வெங்கடேசன். சிறுவயது முதலே வீட்டிற்கு வந்து செல்பவன் என்பதால் அவனது குரலை வைத்து நீ வேங்கடேசன் தானே என வீரலட்சுமி அடையாளம் கண்டு கொண்டதால் அதிர்ந்த வெங்கடேசன் இரும்புக்கம்பியால் அவரை சரமாரியாக அடித்து சுவற்றில் இடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

 

murder

 

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட சிறுவன் போத்திராஜ் செல்போன் மூலம் தந்தைக்கு தகவல் கொடுக்க முயன்றதால் அயன்பாக்ஸ் வயரால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான் வெங்கடேசன். வீட்டுக்குள் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக முன்பக்க கதவை உள்பக்கம் பூட்டி விட்டு வீரலட்சுமி கழுத்தில் கிடந்த தங்க தாலி சரடு மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெங்கடேசன் தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

 

கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தடயங்களை வைத்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்  காவல்துறையினர்.

 

 

 

.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.