Skip to main content

கடத்திக் கொல்லப்பட்ட இளம் பெண் வழக்கு... உறுப்புகளை அனுப்புவதில் தாமதம்...

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
murder case



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரவேலின் மகள் கஸ்தூரி (19) ஆலங்குடியில் உள்ள வெங்கடேஷ்வரா மருந்துக்கடையில் கடந்த 28 நாட்களாக வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் 28 ந் தேதி ஞயிற்றுக் கிழமை வேலைக்குச் சென்ற கஸ்தூரி வீட்டுக்கு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 
 

இந்த நிலையில் பெண்ணை காணவில்லை என்று வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். மருந்துக்கடைக்கு எதிரில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டும் அதிரான் விடுதி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (28) என்பவர் அழைத்துச் சென்ற தகவல் அறிந்து 31 ந் தேதி நாகராஜனை கைது செய்த போலிசார் விசாரணை செய்தபோது, கஸ்தூரி தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்கு செல்லும் காட்டாற்றில் கிடப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ஆலங்குடி போலிசார் மல்லிபட்டினம் சென்று சடலத்தை மீட்டு வந்தனர். அதுவரை கஸ்தூரியுடன் உல்லாசமாக இருந்தபோது மாரடைப்பு எற்பட்டு இறந்துவிட்டார்.
 

நான் ஒருவனே சடலத்தை ஆற்றில் வீசினேன் என்று வாக்குமூலம் கொடுத்த நிலையில் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். கஸ்தூரியின் உறவினர்கள் பனங்குளம் பாலம், பெரியாளூர் இணைப்புச்சாலை, வடகாடு, கீழாத்தூர், புள்ளாண்விடுதி மற்றும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் பல இடங்களில் மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களை தீ வைத்து எரித்தும் போக்குவரத்தை முடக்கினார்கள். இதனால் 7 மணி நேரத்திற்கு பட்டுக்கோட்டை – அறந்தாங்கி, பட்டுக்கோட்டை – பேராவூரணி – புதுக்கோட்டை சாலைகள் முற்றிலும் போக்குவரத்து முடங்கியது. இந்த நிலையில் பனங்குளம் பாலத்தில் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். பிரேதப் பரிசோனைக்கு தங்கள் தரப்பு மருத்துவர்களையும் சேர்க்க வேண்டும். பிரேதப் பரிசோதனையை முழு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. 

 

murder case


 

தொடர்ந்து நாகராஜனிடம் நடத்திய விசாரணையில், தைல மரக் காட்டுப்பகுதியில் சம்பவம் நடக்கவில்லை, ஆலங்குடியிலுள்ள தனது சித்தி வீட்டில் சம்பவம் நடந்ததாகவும் கஸ்தூரி இறந்த பிறகு அவரது உடலை மறைக்க தனது உறவினர்கள் உதவி செய்ததாகவும் கூறியதாக தெரியவருகிறது. மேலும் விசாரணை தொடர்வதால் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் வெளிவரலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 1 ந் தேதி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில் கஸ்தூரி உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள், தடயங்கள் சேகரிப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக் கிழமை வரை சம்மந்தப்பட்ட போலிசார் அதனை பெற்ற நீதிமன்றத்தில் கடிதம் பெற்று பரிசோதனைக்காக திருச்சி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியதாக தெரியவில்லை. அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் 7 ந் தேதிக்கு பிறகே உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. 
 

கால தாமதம் ஏற்படுவதால் உறுப்பகளில் சிதைவு ஏற்பட்டு ஆய்வில் சரியான முடிவுகள் தெரிய வாய்ப்புகள் உள்ளதா என்று உறவினர்கள் வினா எழுப்பி உள்ளனர். வெள்ளிக் கிழமை இரவு கஸ்தூரி வீட்டுக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன்.. கஸ்தூரி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையில் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சடலத்தை மறைக்கவும் பலர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களை அனைவரையும் காவல் துறை பாரபட்சம் இன்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொலை சம்பவத்தில் சரியான தடயங்களை சேகரித்து வழக்கில் இணைக்க வேண்டும். கைது நடவடிக்கைகள் தாமதம் ஏற்படும் நிலையில் சி.பி.எம், மாதர்சங்கம் கஸ்தூரியின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.  இந்த நிலையில் இன்று அல்லது நாளை கஸ்தூரி மரணம் சம்மந்தமாக சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

    சார்ந்த செய்திகள்

    Next Story

    அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

    Published on 18/03/2024 | Edited on 18/03/2024
    Case against 10 people who conducted Jallikattu without permission

    ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

    இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story

    திடீரென வந்த டூப் மோடி; கஸ்தூரி கொடுத்த பகீர் பேட்டி; அப்செட் ஆன அர்ஜுன் சம்பத்

    Published on 11/03/2024 | Edited on 11/03/2024
    Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

    இந்து மக்கள் கட்சி நடத்திய  பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என  நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.

    Sudden dope Modi; Bagheer interview given by Kasturi; An upset Arjun Sampath

    இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.

    கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.