Skip to main content

இயற்கை மரங்களை அழித்து சிமெண்ட் மரங்களை உருவாக்கும் நகராட்சி!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019


இயற்கையோடு இணைந்த வாழ்வு என்றுமே சிறந்தது.. நகரில், சாலையோரங்களில் மருத்துவமனை வளாகங்களில் நின்ற உயிர் மரங்களை வெட்டி விற்றுவிட்டு  பல லட்சங்களை செலவு செய்து செயற்கையாய் சிமெண்டால் மரங்களை உருவாக்கி நகரை அழகுபடுத்தி பார்க்கும் புதுக்கோட்டை நகராட்சியின் நிலையை பார்த்து இயற்கை ஆர்வலர்கள் கோபம் கொள்கிறார்கள்.

 

 

Municipality making cement trees to destroy natural trees!

 

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்காண மரங்களை சாய்த்தது கஜா புயல்.புதுக்கோட்டை நகரில் மட்டும்கஜா புயலுக்கு  லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை அந்ததந்த பகுதி இளைஞர்களே சீரமைத்து வழிகளை ஏற்படுத்தினார்கள். அதேநேரத்தில் சாய்ந்த மரங்களை அகற்றுவதாக சொல்லி அதிமுகவினரும், அவர்களின் அடிபொடிகளும் புயலுக்கு தப்பிப்பிழைத்த உயிர் மரங்களையும் வெட்டி அகற்றினார்கள். 

 

 

ராணியார் மருத்துவமனை வளாகத்தில் பல உயிர் மரங்கள் அகற்றப்பட்டது. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை மட்டும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மரங்களை நட்டு மீண்டும் புணரமைத்து வருகிறது. அதைத்தாண்டி மரங்களின் காதலர்கள் வீடு வீடாக மரக்கன்றுகளை நடுவதுடன் விழாக்களில் கன்று கொடுப்பது என்று பல்வேறு பெயர்களில் குழு குழுவாக சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றர். ஆனால் பசுமை புதுகை என்று அழகான வாக்கியத்தை வைத்து பெருமை அடித்துக் கொண்ட புதுக்கோட்டை நகராட்சி எங்குமே ஒரு சில மரக்கன்றுகள் கூட நட்டதில்லை.


 

ஆனால்  பூங்கா என்ற பெயரில் புதுக்குளம் வடக்கு கரை பகுதியில் சுமார் ஒரு கோடி செலவு செய்தது. அதேபோல பெரியார் நகர் ராஜகோபாலபுரம், தண்ணீர் தொட்டி அருகில் அடப்பன் வயல், அடப்பன் குளம் அருகில் மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைத்த ஒரு சில மாதங்களுக்கு பிறகு பூங்கா இருந்த சுவடே இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் காணாமல் போனது. பல்வேறு பெயர்களில் கொடுக்கப்பட்ட அரசின் நிதி வீணடிக்கப்பட்டது. தரம் குறைந்த பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட காந்தி பூங்கா மட்டும் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதனையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டதால் அங்கேயும் கட்டணக் கொள்ளை. அதையும் இந்த நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. 
 

Municipality making cement trees to destroy natural trees!

 

இந்த காந்தி பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவின் நுழைவாயில் கதவு விழுந்து ஒரு சிறுமி பலியானார். அப்போதைக்கு பரபரப்பானது.. இந்த நிலையில் தான் மீண்டும் பூங்கா என்ற பெயரில் பேருந்து நிலையம் அருகில் மகளிர் கல்லூரி சாலையில் பெரிய மரம் உடைந்திருப்பது போல அமைத்து அதில் குழந்தைகள் சறுக்கி விளையாட அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா எத்தனை நாளைக்கோ..



பூங்கா என்ற பெயரில் அரசின் நிதியை வீணாக்காமல் நகராட்சியின் முன்பகுதி தெற்கு  4 புதிய பேருந்து நிலையம் திலகர் திடல், மன்னர் கல்லூரி சாலை, ஆலங்குடி சாலை என நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் முறையாக மரங்களை நட்டு கூண்டுகளை அமைப்பு பராமரித்தால் புதுக்கோட்டை நகரம் பசுமை புதுகையாகவும் எதிர்கால மக்களின் நலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதில் நிதி மோசடி செய்ய முடியாதோ என்ற நிலையில்  நகராட்சி இதை கவனத்தில் கொள்ளுமா? என்கிறார்கள் நகர மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.