Skip to main content

முள்ளிவாய்க்கால் முற்றம் நடராசனின் கொள்கை உணர்வுக்கு காலங் கடந்து நிற்கும் வரலாற்றுச் சின்னம் - கி.வீரமணி

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
natarajan

 

சசிகலாவின் கணவர் ம.நடராசன் மறைந்தார்.  அவரது மறைவு குறித்து திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள இரங்கல்:

’’அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலந்தொட்டே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர் ம. நடராசன் வாழ்நாள் இறுதி வரை ஒரு மொழிப் போராளியாகவும், இனப் போராளியாகவும், சீரிய சுயமரியாதைக் காரராகவும், பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தவர். திராவிட உணர்வின் மாறாத அடையாளமாகவும் திகழ்ந்தவர்.

 

அரசியலில் அவரின் நிலைப்பாட்டிற்கும் அவர் சிற்சில நேரங்களில் எடுத்த நிலைப்பாட்டிற்கும் மாறுபாடுகள் நமக்கு இருப்பினும், நட்பில் எப்போதும் நம்மிடம் மாறாத மாண்பாளர், தலை சிறந்த மனிதநேயப் பண்பாளர்; மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்குசென்று நேரில் பார்த்தேன்.

 

சிறந்த இலக்கியவாதி, நல்ல எழுத்தாளர் பலரையும் ஆதரித்து உதவிய ஒரு கொடையாளி. ஈழத் தமிழர் பிரச்சினையில், அவர்களுக்காக முன்னின்று ஆதரவு தந்ததோடு, இனப்படுகொலையை உலகம் அறிந்து கொள்ளும் வரலாற்று சான்றாவணமாக்கிடும் தஞ்சையில் "முள்ளிவாய்க்கால் முற்றத்தை" அவர் அமைத்தது அவருடைய கொள்கை உணர்வுக்கு, காலங் கடந்து நிற்கும்  வரலாற்றுச் சின்னமாகும். அதன் மூலம் என்றென்றும் அவர் வாழ்வார் என்பது உறுதி.

 

அவருடைய இழப்பு திராவிடர் சமுதாயத்திற்கே பெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் அவருடைய வாழ்விணையர் திருமதி சசிகலா மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும் உரித்தாகுக! ’’

                      

சார்ந்த செய்திகள்

Next Story

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி,மேட்ச்வின்னர்; புகழ்ந்து தள்ளிய இந்திய வேகம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

நடராஜன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு மேட்ச்வின்னர் என்கிற பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.

ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதை மட்டுமே எண்ணமாக வைத்து ஹெட் சிறப்பாக ஆடினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

ஹெட்டின் அனுபவ பேட்டிங்கை தூக்கி சாப்ப்பிடும் அளவுக்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் இருந்தது. 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கம் சொதப்பினாலும், அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் பேட்டில் இருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரிகளும், சிக்சர்களும் வெடித்து சிதறியது.18 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 Natarajan is a hard worker, match winner; Praised by Indian pacer

ஆட்டம் நிறைவடைந்த பின்பு மூத்த வீரர் புவனேஷ்வர் குமாரிடம் வெற்றி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “இவ்வளவு ரன்களை நாங்கள் எடுத்து அதை எதிரணி துரத்தும் போது நாங்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாக நடக்கும். நடாரஜன் யார்க்கர் வீசுவதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அமைதியான ஒரு வீரர் மற்றும் கடின உழைப்பாளி. சொல்லப்போனால் நடராஜன் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். ஐபிஎல் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எங்கள் பேட்டிங் இந்த அளவு சிறப்பாக இருப்பது இதுதான் முதல்முறை. இப்போது எங்களுக்கு 200 முதல் 220 ரன்களே குறைவான் இலக்கு போலத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு எங்கள் பேட்டிங் யூனிட் உள்ளது. வலைப்பயிற்சியில் அபிஷேக் மற்றும் ஹெட்டின் பேட்டிங் பயிற்சியில் பந்து வீசியதின் மூலம் என்களை மெருகேற்றிக் கொண்டோம். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றுத் தரும். பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தரும்” என்றார்.

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.