தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்க இருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை துரைமுருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முல்லைப்பெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தேசிய நதிநீர் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நாளை நிகழவிருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.