Skip to main content

முல்லைப்பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம் சீராக உள்ளது! துணை குழு ஆய்வு முடிவு!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் இயக்கம் சீராக உள்ளதாக துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

 

Mullaperiyar Dam-Sub committee review

 



முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் இருந்துவருகிறார். பிரதிநிதிகளாக முல்லைப் பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இரவின். உதவி செயற்பொறியாளர் குமார். கேரளா பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜோஸ்சக்ரியா. உதவி பொறியாளர் பிரசித் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்தக் குழு கடந்த டிசம்பர் 9ல் அணையின் நீர்மட்டம் 120.85 அடியாக இருந்த போது இந்தத் துணைக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். வரும் 28ஆம் தேதி கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதை முன்னிட்டு தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்தும் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். 

 



அப்பொழுது மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி  மற்றும் அணையின் நீர்வரத்து நீர் வெளியேற்றம் சிப்பேர்ஸ் வாட்டர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.அதற்கு முன்பாக இக்குழு தலைவர் சரவணகுமார் தமிழக அதிகாரிகளுடன் தேக்கடி படகு துறையில் இருந்து தமிழக பொதுப் பணித்துறை படகில் புறப்பட்டு சென்றனர். கேரள அதிகாரிகள் கேரளா மாநில வனத்துறையின் படகில் அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அதிகாரிகள், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்படவேண்டிய மராமத்துப் பணிகள் குறித்து வரும் 28ஆம் தேதி கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்ய வருவதற்கு முன்னோட்டமாக தற்போது  முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யப்பட்டது. 

அணையின் சீப்பேஜ் வாட்டர் நிமிடத்திற்கு நாற்பத்தி ஒரு லிட்டர் அளவில் உள்ளது. இது அணையின் நீர்மட்டஅளவிலான 119.40க்கு மிகத்துல்லியமான அளவாக உள்ளது. அணையில் மூன்று மதங்களை இயக்கி பார்த்ததில் அதன் இயக்கம் சீராக உள்ளது துணைக் குழுவின்  ஆலோசனை கூட்டம் முடிவு கண்காணி குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Car parking issue in Mullaip Periyar dam area; The Supreme Court is in action

 

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.